நீண்ட காலம் காத்திருக்கிறீர்களா?

B.A. Manakala


அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். சங் 59:9.

பல வருடங்களுக்கு முன்பு, நாங்கள் வட இந்தியாவிலுள்ள தொலைதூர கிராமம் ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நகரத்திற்குத் திரும்புவதற்காக, அந்த கிராமத்தாருடைய ஆலோசனையின் பேரில்,  காலை 10 மணிக்கெல்லாம் நாங்கள் ஒரு பேருந்துக்காகக் காத்திருந்தோம். மதியம் 2 மணி வரை சென்ற அந்த மிக நெடிய காத்திருப்புக்குப் பின்னர், நாங்கள் வேறொரு பேருந்தில் ஏறி, நேர் எதிரான திசையில் சென்றோம். ஏனெனில், நாங்கள் காத்துக்கிடந்த அந்த பேருந்து, கடைசி வரை வரவே இல்லை! 

தாவீது, தேவன் தன்னை தப்புவிக்க வரும்படி, அவருக்காகக் காத்திருக்கிறார். ஏனென்றால், தன்னுடைய காத்திருப்பு பிரயோஜனமுள்ளது என்று அவர் அறிந்திருந்தார் (சங். 59:9).

'காத்திருத்தல்' என்பது வழக்கமாகவே கடினமான ஒரு காரியம் தான். பொதுவாக, குறிப்பிட்ட ஒரு கால கட்டத்திற்குப் பின்னர், நாம் காத்திருப்பதை நிறுத்தி விடுவதுண்டு. எந்த அளவுக்கு நாம் காத்திருக்க முடியும் என்பது, எந்த அளவுக்கு நாம் பொறுமையாய் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது; எந்த அளவுக்கு நாம் பொறுமையாய் இருக்கிறோம் என்பது, நம்மிடம் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைப் பொருத்தது (1 கொரி. 13:4). உங்களுக்கு அன்பு இருந்தால், காத்திருப்பது எளிது. யாக்கோபு ராகேலைத் திருமணம் செய்ய 7 வருடங்கள் காத்திருக்கவில்லையா?  (ஆதி. 29:27-28).

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையிலே, யாருக்காக ஆவலாய்க் காத்திருக்கிறீர்கள்? அந்த காத்திருப்பு பிரயோஜனமுள்ளது தான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? 

கர்த்தருக்காக எவ்வளவு நீண்ட காலமாய் நீங்கள் காத்திருந்தாலும், அந்த காத்திருப்பு பிரயோஜனமுள்ளதே! 

ஜெபம்: கர்த்தாவே, தேவையான காலம் வரை உமக்காகக் காத்திருப்பதற்கு, எனக்குப் போதுமான அளவு அன்பையும், பொறுமையையும் தாரும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்