Posts

யார் உங்களை தப்புவிக்க முடியும்?

Image
Thursday, July 15, 2021 B.A. Manakala தேவனே , உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து , உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும். சங். 54:1. பெலிஸ்தர்கள் , இராட்சத வீரனான கோலியாத்தை தங்கள் மீட்பராகவும் , பாதுகாவலனாகவும் தேர்ந்தெடுத்தனர். சிறிய  இளைஞனான தாவீதோ... , அந்த இராட்சதனுக்கு விரோதமாக யுத்தம் செய்ய.. , தேவனைத் தேர்ந்தெடுத்தான். இறுதியில்... , அந்த இராட்சதன் கொல்லப்பட்டான்! (1 சாமு. 17). பெரும்பாலும்... , நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக , நம்மை உணர்கிறோம். இது ஒருவேளை... பரவாயில்லை எனலாம். ஆனால்.. , நாம் தேவனை விட உயர்ந்தவர்கள் என்று நம்மை நினைத்தால்... , என்ன செய்வது ? உண்மையைச் சொல்லப்போனால்.. , கோலியாத் அப்படித்தான் உணர்ந்ததாகத் தோன்றுகிறது. "நீ எனக்கு விரோதமாக ஒரு தடியோடு வருவதற்கு , நான் என்ன ஒரு நாயா ?" என்று அவன் தாவீதைப் பரிகாசம் பண்ணினான். கர்த்தரே உங்களுடைய வலிமைமிக்க பாதுகாவலர் (உபா. 32:4). அவர் நம்மை சாத்தானிடம் இருந்தும்கூட காப்பாற்றுகிறார். சரியான பாதுகாவலரை நீங்கள் தேர்வு செய்தால் , உங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது! ஜெபம்: கர்த்தாவே , என் மீட்பராகவ

மேய்ப்பனுக்கு ஆடு செவிகொடுக்கிறது

Image
Wednesday, July 14, 2021 B.A. Manakala சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக. தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது , யாக்கோபுக்குக் களிப்பும் , இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். சங். 53:6. ஆடுகள் , எப்போதுமே தம் மேய்ப்பனின் சத்தத்தைக் கண்டறிந்து , அதற்கு அவைகள் மறுமொழி அளிக்கின்றன. வேறு பல குரல்கள் , மேய்ப்பனின் குரலுக்கு மிகவும் ஒத்திருந்தாலும் கூட... , அவற்றால் அவைகள் திசைதிருப்பப்படுகிறதில்லை (யோவா. 10:27). தம்முடைய ஜனங்களை மட்டும்தான் தேவன் மீட்பாரா ? பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் தேவன் மன்னித்து , அவர்கள் அனைவரையும் அவர் மீட்டெடுக்க , நான் விரும்புகிறேன். சொல்லப்போனால்.. , உண்மையில் அவருடைய வாஞ்சையும்  கூட அது தானே! (1 தீமோ. 2:4). ஆனாலும்... , தம்மில் விசுவாசம் வைக்கிறதற்கான சுதந்திரத்தை , தேவன் மனிதனிடமே கொடுத்து விட்டார் (யோவா. 3:16). அவரை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். அந்நாளில்தானே நீங்களும் மீட்கப்படுவீர்கள்! நீங்கள்...தேவனின் சத்தத்தைக் கேட்டும் , அறிந்தும் இருக்கிறீர்களா ? அப்படியானால்... , நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். ஜெபம்: கர்த்தாவே

எவ்வளவு காலம் அவர் மன்னிப்பார்?

Image
Tuesday, July 13, 2021 B.A. Manakala உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப் பண்ணினபடியால் , பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள். தேவன் அவர்களை வெறுத்தபடியினால் , நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சங். 53:5. நான் ஒரு வளர்ப்பு நாயை ஆசையாக வாங்கினேன். அதை நன்கு பயிற்றுவிக்க , நான் நீண்ட  காலமாய் முயற்சிகள் எடுத்தும்... , வருகிற விருந்தினர் அனைவருக்கும் , தீங்கு விளைவிக்கிறதாகவே அது தொடர்ந்து இருந்து வருகிறது! நான் இப்போது அதைப்பற்றி நம்பிக்கையற்றுப் போனேன். என் செல்லப்பிராணியிடம் , நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பீர்கள் ? உங்களையும் , என்னையும் தேவன் ஒரு அற்புதமான நோக்கத்துடன் படைத்தார் (எரே. 29:11). நாம் அவருடைய வழிகளைத் தொடர்ந்து புறக்கணித்து , நம் வழியிலேயே சென்றால் என்ன செய்வது ? தேவன் , உலகில் உள்ள ஒவ்வொருவரையும் மன்னித்து , நித்திய வாழ்வை அருளவே விரும்புகிறார் (யோவா. 3:16).   துன்மார்க்கம் உச்சத்தைத் தொட்டபோது.. , ஒருமுறை தேவன் அதை , வெள்ளத்தால் தீவிரமாகக் கையாண்டார் (ஆதி. 7). பூமியை , மீண்டும் வெள்ளத்தால் ஒருபோதும் நிர்மூலமாக்க மாட்டார் எ

ஒருவனும் நல்லவன் இல்லை!

Image
Monday, July 12, 2021 B.A. Manakala அவர்கள் எல்லாரும் வழி விலகி , ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. சங். 53:3. சென்ற வருடம்... , நாங்கள் குடும்பமாக , இந்தியாவிலுள்ள வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தோம். நாங்கள் சேர வே‌ண்டிய இடத்தைச் சென்றடைந்த உடன்தானே... , அம்மாநில அரசாங்கம் , எங்கள் ஒவ்வொருவர் மீதும் , " நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்டவர்" ( institutional quarantined) என்ற முத்திரையைக் குத்தியது! எங்களுக்கு சிறு குழந்தை இருந்தபடியால்... , மறுநாளிலே , " வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்" ( home quarantined) என்று வேறொரு முத்திரையைப் பதித்து , அவர்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்! "நல்லவர் இல்லை" என்ற  முத்திரை குத்தப்பட நீங்கள் விரும்புவீர்களா ? ஆனால்... , சங் 53:3ல் வலியுறுத்தப்பட்டபடி , உண்மை அதுவாகத் தான் இருந்தது. ஆயினும்... , இயேசுவானவர் , " நல்லவன் இல்லை" என்கிற அந்த முத்திரையைத் தம்மீது ஏற்றுக் கொண்டு , நம்மீது பதிந்திருந்ததை , " நீதியுள்ளவன்" என்ற புது முத்திரையால் மாற்றியமைத்தார். (2 கொ

யார் உண்மையிலேயே புத்திமான்?

Image
Sunday, July 11, 2021 B.A. Manakala தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க , தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். சங். 53:2. என் பிரச்சனைகள் பலவற்றை... , கூகிள்  வலைதளத் தேடல் ( Google Search) மூலமாகவே மேற்கொண்டு விடுகிறேன். பிரச்சனையின் சிக்கல் அதிகமாக அதிகமாக... , அதைத் தீர்ப்பதும் கடினமாகிறது. சுமார் 20 பீட்டாபைட்கள் ( petabytes) அளவுக்கு தகவல்களைக் கூகிள் ( Google) கையாள்கிறது என்றாலும்கூட... , சில சமயங்களில்.. , என் தேடல்கள் குழப்பத்தில் தான் முடிவடைகிறது! மனிதன் ஓர் சமூக ஜீவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான் (ஆதி 2:18). எனவே.. , அவன் தனது ஜீவியத்துக்காக , பகிர்ந்து கொள்ள வேண்டும் , கற்றுக் கொள்ள வேண்டும் , நம்ப வேண்டும். ஏவாள் இல்லாமல் , ஆதாமால் ஜீவிக்க முடியாது. நமக்கு தேவனும் வேண்டும். அத்துடன்.. , மற்ற ஜனங்களும் வேண்டும். தங்கள் பார்வைக்கு ஞானிகளும் , தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசா 5:21). இடைவிடாமல் தேவனைத் தேடுவோன் , மெய்யாகவே ஞானவான் (சங். 53:2). ஜெபம்: கர்த்தாவே , என் வாழ்நாளெல்லாம்  உம்மைத் தேட எனக்குக் கற்றுத்த

தேவன் இல்லையா!?

Image
Saturday, July 10, 2021 B.A. Manakala தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். சங். 53:1. காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதின் சத்தத்தை நீங்கள் கேட்டாலும் , அதை உங்களால் பார்க்க முடியாது (யோவா. 3:8). வாழ்க்கையின் கடினமான கால கட்டங்களில்... , ' தேவன் எங்கே ?', ' அவர் இருக்கிறாரா ?'... என்றெல்லாம் நான் கேட்டால்... , நான் ஒரு மடையனா ? நம்மில் யாரானாலும் , இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது... இயல்பானது தானே ? இயேசு , ' என் தேவனே! , என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் ?' ( சங். 22:1) என்று கேட்டபோது.. , பிதாவாகிய தேவன் , மனம் புண்பட்டாரா ? தேவனின் ஆழங்களைப் புரிந்துகொள்வதில்.. , நாம் குறுகிய வரையறைக்குள் இருக்கிறோம் (யோபு 11:7 , 36:26 ; சங் 145:3). தேவனைப் பற்றிய என் அறிவு... , ' எனக்கு தேவனைத் தெரியாது! ' என்று சொல்வதற்கு மட்டும் தான் போதுமானது. மற்ற சிருஷ்டிப்பு அத்தனையும்.. ' தேவன் இருக்கிறார் ' என்று பறைசாற்றுகின்றது (ரோம. 1:20). ' தேவன் இல்லை ' என்று நீங்கள் நினைப்பதினால்... , தேவன் வருந்தப்போதுமில்லை. அப்ப

உங்கள் நல்நாமம் என்ன?

Image
Friday, July 09, 2021 B.A. Manakala நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து , உமது நாமத்திற்குக் காத்திருப்பேன். உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது. சங். 52:9. சில ஜனங்கள்.. , தங்களுடைய ' குடும்பப் பரம்பரைப் பெயர் ' பற்றின மிகுந்த பெருமை காரணமாக... , அந்தப் பெயருடன் மட்டுமே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் அதிக முனைப்புடன் இருக்கின்றனர். இங்கே... , எல்லா நாமங்களுக்கும் மேலான ஒரு நாமம் இருக்கிறது! ஒரு நாளிலே.. , முழங்கால் யாவும் அந்நாமத்திற்கு முடங்கும்! (பிலி. 2:9-10). சிலுவையில் அறையப்பட்டேன். இனி நான் அல்ல.. , கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா. 2:20). அவரும் , அவருடைய நாமமும் பெருகவும் , நானும் , என்னுடைய நாமமும் , சிறுகவும் வேண்டும் (யோவா. 3:30). உங்களுடைய நாமங்கள் பரலோகத்தில் எழுதப்பட்டு இருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் (லூக்10:20). ஓர் நாளிலே... , உங்களுக்கு ஒரு புதிய நாமம் கொடுக்கப்படும் (வெளி. 2:17). பூமிக்குரிய பெயர்கள் , தற்காலிகமானவை. பரலோகப் பெயரைச் சம்பாதியுங்கள். ஜெபம்: கர்த்தாவே ,  பூமிக்குரிய கீர்த்தியைக் காட்டிலு