ஊற்றி விடுங்கள்

18 September 2020

B.A. Manakala

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். சங். 62:8.

எங்களுடைய ஒரு வருட கால திருமண நிச்சயதார்த்த வாழ்க்கை எனக்கு நினைவு இருக்கிறது. உண்மையாகவே, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு எங்களுக்கு ஏராளம் இருந்தது. எங்கள் சம்பாஷணையை நிறுத்தியவுடன் நாங்கள் சோகமாக உணர்வோம். அதன் பின்பும், நாங்கள் அடுத்த உரையாடலுக்காக ஆவலாய்க் காத்திருப்போம். அது மாத்திரமல்ல, கணவன் மனைவியாகவும், நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற எங்கள் நேரங்களை நாங்கள் இன்னமும் விரும்புகிறோம்.

எப்போதுமே நம்முடைய இதயத்தை தேவனிடம் ஊற்றிவிட வேண்டுமென அவர் விரும்புகிறார். நீங்கள் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் இருதயத்தில் இருந்த..., இருக்கிற..., இருக்கப்போகிற... எல்லாவற்றையும் அவர் ஆழ்ந்து படிக்கிறார்... என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அநேகமாய், தேவனைத் தவிர வேறொருவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் நமக்கு இருக்கலாம். கர்த்தர் உங்களுக்காகக் காத்திருக்கிறார் (ஏசா. 30:18). நீங்கள் அவருக்காக எந்த அளவுக்கு காத்திருக்கிறீர்கள்உங்கள் இருதயத்தை எந்த அளவுக்கு அவரோடு பகிர்ந்து கொள்கிறீர்கள்?

நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் இருதயத்தை தேவனிடத்தில் ஊற்றி விடுகிறீர்கள் என்பதே..., நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம்!

ஜெபம்: கர்த்தாவே, என் இருதயத்தை உம்மிடத்தில் ஊற்றிவிடுவதற்கு நேரத்தை ஒதுக்க, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்