அவர் அதிசயமான காரியங்களைச் செய்கிறார்
B.A. Manakala
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அவரே அதிசயங்களைச் செய்கிறவர். சங். 72:18.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற தாஜ்மகாலைக் கட்டி முடிக்க..., 1000 யானைகள் மற்றும் 22,000 தொழிலாளர்களின் உதவியோடு..., 17 வருடங்கள் எடுத்துக் கொண்டது.
மனிதன் பல அற்புதமான விஷயங்களை பூமியில் செய்தான். ஆயினும்..., தேவன் செய்கிற அதிசயமான காரியங்களைப் பார்த்து, நாம் தொடர்ந்து வியக்க மட்டுமே முடியும். தேவன் நமக்குக் கொடுத்த குறுகிய அறிவைக் கொண்டு, பூமியிலுள்ள அனைத்து வியத்தகு செயல்களையும் நாம் செய்தோம். தேவன் அனுமதித்தால் மட்டுமே, நம்மால் அதிசயங்களைச் செய்ய முடியும். ஆம்! 'பாபேல்' என்ற அதிசயத்தை தேவன் எழும்பி வர விடவில்லை (ஆதி. 11). ஆனால்..., மற்ற எல்லா ஜனங்களையும், மிருக ஜீவன்களையும் அழித்துப் போட்ட பெருவெள்ளத்தின் போது..., நோவாவையும், அவன் குடும்பத்தையும், பூமியின் எல்லாவித ஜீவ ராசிகளில் ஒவ்வொரு ஜோடையும், காத்த 'பேழை' என்ற ஓர் அதிசயத்தை உருவாக்க..., நோவாவை தேவன் அனுமதித்தார்! தேவனுடைய அற்புதமான பல காரியங்களை, நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியதாய் இருக்கிறது!
தேவன் செய்கிற... என்ன வியத்தகு செயல்களை நான் பார்க்கிறேன்?
மனித அதிசயங்கள், தேவனுடைய அற்புதமான படைப்புகளில், வெறும் சிறு அங்கங்களே!
ஜெபம்: கர்த்தாவே, நீர் செய்கிற அதிசயமான காரியங்களைக் காணும்படி என் கண்களைத் திறந்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment