மிருகம் Vs மனிதன்
B.A. Manakala
நான் காரியம் அறியாத மூடனானேன். உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். சங். 73:22.
"மனிதன் ஒரு சமூக விலங்கு. சமுதாயம் இல்லாமல் வாழ்கிறவன்..., மிருகமாகவோ அல்லது கடவுளாகவோ இருக்கிறான்" என்று கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறினார்.
சங்கீதக்காரர், பிறரைப் பற்றி எதிர்மறையாகவே சில காலம் பேசிவிட்டு..., தான் ஒரு மிருகத்தைப் போல் உணர்வற்றவனாய் இருந்ததால் தான் அவ்வாறு செய்ததாக பின்னர் உணர்வடைந்தார் (சங். 73:22). மனிதன் மற்றும் விலங்குகள் என இரண்டையுமே படைத்தவர் தேவனே. ஆனாலும் அவ்விரண்டையும் பெருத்த வித்தியாசத்தோடு அவர் உண்டாக்கினார். மனிதர்கள் மட்டுமே... தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள். தேவனின் அந்த சாயல் தான் நம்மை விசேஷித்தவர்கள் ஆக்குகிறது. மிருகங்கள்..., அவற்றின் இயற்கை உள்ளுணர்வுகளைப் பின்பற்றி, அவைகள் செய்ய விரும்புகிற அனைத்தையும் செய்கின்றன (2 பேது. 2:12). நாம் உணர்வற்றவர்கள் ஆகும்போது, நாம் மிருகங்களைப் போல் ஆகிறோம் (பிர. 3:18-19). மேலும், நாம் மிருகங்களைப் போலவே தான் மரிப்போம் (சங். 49:20).
தேவனின் படைப்பாக..., 'நான் எவ்வளவு தனித்துவம் வாய்ந்தவன்' என்பதை நான் கண்டுணர்கிறேனா?
மிருகங்கள் ஒருபோதும் மனிதர்களைப் போலாக முடியாது; ஆனால்..., மனிதர்கள், மிருகங்களைப் போலாக முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய படைப்பாக..., என்னில் உள்ள முழு ஆற்றல்வளத்தையும் நான் கண்டுணர எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment