புல்லையும், பூவையும் போல!

Tuesday, March 30, 2021

B.A. Manakala

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல்  பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப் போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல் வாடிப் போவார்கள். சங். 37:1-2.

புற்களும், பூக்களும் சீக்கிரமே செழித்து..., சீக்கிரமே வாடியும் போகும்! மனுஷருடைய நாட்களும்..., புல்லுக்கும், பூவுக்கும் ஒப்பாயிருக்கிறது. சீக்கிரமே செழித்து, சீக்கிரமே அறுப்புண்டுபோம் (சங். 103:15). துன்மார்க்கரும் கூட, புல்லைப் போலவே அறுப்புண்டு போவார்கள் (சங். 37:2). ஆரோக்கியம், செல்வம், நண்பர்கள், வேலை, சொத்துபத்துகள்..., இன்னும் இது போன்ற..., அநேகமாய் பூமியில் நாம் காண்கிற அனைத்திற்குமே.., கிட்டத்தட்ட இதே இயல்பு தான் உள்ளது. அப்படியானால்..., அறுப்புண்டு போகாத ஏதேனும் ஒன்று இருக்கிறதா? ஆம்! கர்த்தர் ஒருவரே அழியாதவர்!

வசனங்கள் 3-5, ஞானமுள்ள வழிமுறைகளை வழங்குகிறது:

1) கர்த்தரை நம்பி நன்மை செய்.

2) கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு.

3) நீ செய்கிற எல்லாக் காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவி.

கர்த்தருடைய வசனமும் கூட என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா. 40:8).

புல்லும், பூவும் செழித்து..., உதிர்ந்துபோம். தேவனும், அவருடைய வார்த்தையும் ஒருபோதும் அழியா!

ஜெபம்: அன்பின் கர்த்தாவேஇவ்வுலகில் புல்லைப் போல் இருக்கிற மற்றெல்லாவற்றைக்  காட்டிலும்..., உம்மையே எப்போதும் நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்