தேவனுடைய சிட்சை

Tuesday, April 13, 2021

B.A. Manakala

கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும். உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். சங். 38:1.

ஒரு முறை..., குழந்தை ஒன்று, சூடான இஸ்திரிப் பெட்டியைத் (Iron Box) தொட வேண்டும் என்று தன் தந்தையிடம் அடம்பிடித்து அழுததை நான் பார்த்தேன். தந்தையோ, கண்டிப்புடன் மறுத்தார். குழந்தை இன்னும் அதிகமாக முரண்டு பண்ணி அழுதது. கடைசியில்..., குழந்தை அதைத் தொடுவதற்கு அந்தத் தந்தை விட்டுவிட்டார்! பின்விளைவைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது  உங்களுக்கே தெரிந்திருக்கும்!

 

நீங்கள் கோபமாய் இருக்கையில் உங்கள் பிள்ளையை அடிக்காமல் இருப்பது நல்லது. ஆயினும், எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஒழுங்கீனமாய் விட்டுவிடுகிறதில்லை. இங்கே தாவீது, தேவன் கோபமாயிருக்கையில் மட்டும் தன்னை தண்டிக்க வேண்டாம் என்றே வேண்டிக் கொள்கிறார் (சங். 38:1). தேவன் நம்மை எவ்விதம் சிட்சிக்கிறார் என்பது எபி 12:4-11ல் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

எபி 12:6..., "கர்த்தர் எவனிடத்தில் அன்பு கூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்" என்று கூறுகிறது.

தேவனின் சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்; அதன் விளைவை  நீங்கள் கண்டிப்பாய் விரும்புவீர்கள்.

ஜெபம்: கர்த்தாவே, நீர் என்னை சிட்சிக்கையில்..., அதைப் புரிந்து கொண்டு, உமக்கு அடங்கியிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்