சமூக இடைவெளி!

Thursday, April 15, 2021

B.A. Manakala

என் சிநேகிதரும், என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள். என் இனத்தாரும் தூரத்தில் நிற்கிறார்கள். சங். 38:11.

இந்நாட்களில், 'சமூக இடைவெளி' என்பது பழக்கப்பட்ட ஒரு பதமாகி விட்டது. ஏனெனில், கொரோனாவைத் தோற்கடிக்கும் மிக முக்கியமான வழிகளுள் இதுவும் ஒன்று. மனிதன் ஓர் சமூக விலங்கு. சமுதாயம் இல்லாமல் அவனால் உயிர்வாழ முடியாது. ஆனால் தற்போதைய நிலைமையோ, இதற்கு நேர்மாறாக இருக்கச் சொல்கிறது.

இன்றைக்கு நான் தும்மினால் கூட, மக்கள் என்னிடமிருந்து விலகி இருக்க முயல்கிறார்கள்.  சங் 38:11ல் தாவீதின் அன்புக்குரியவர்களும் கூட.., அவர் வியாதியாய் இருக்கையில், அவரைத் தூர விலக்கினர். இத் தருணத்தில்... அவருடைய வியாதி என்பது..., பத்சேபாளிடத்தில் அவர் செய்த பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வேயன்றி வேறு எதுவுமாகத் தெரியவில்லை. ஏதேன் தோட்டத்தில்.., பாவத்தின் குற்ற உணர்வு, மனிதனை தேவனிடமிருந்து விலக்கியது. இன்றைக்கு அது சமூக விலகலையும் ஏற்படுத்துகிறது.

பாவத்தின் குற்ற உணர்வு, உங்களை தேவனிடமிருந்தும், மனிதனிடமிருந்தும் தூர விலக்கலாம். ஆயினும் மனம்திரும்புதல்.., இவ்விருவருடனான உறவைச் சீர்படுத்த முடியும்.

ஜெபம்: கர்த்தாவே, பாவத்தின் குற்ற உணர்வை என்னிடமிருந்து துடைத்துப் போடும். நான் மனந்திரும்பிஉம்முடனான உறவைத் திரும்ப கட்டியெழுப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்