நீடிய வாழ்வு!
Tuesday, April 20, 2021
B.A. Manakala
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். சங். 39:4.
வேத வசனங்களில் வாக்குப் பண்ணப்பட்ட (உ.ம்.: எபே. 6:2) 'நீடித்த வாழ்நாள்' என்பதும்கூட... மிகக் குறுகியதே! சங் 39:4ல், தாவீதிடம் இருந்து வருகிற இந்த ஜெபத்திற்கு..., ஒருவேளை 'கொரோனா பெருந்தொற்று' ஒரு பதிலாகக் கருதப்பட முடியுமா? எல்லாம் இல்லாவிட்டாலும்..., உலகிலே மக்கள் செய்கிற பெரும்பாலான விஷயங்கள்..., இப்பூமியில் மாத்திரமே நன்மை பயப்பனவாக இருக்கும். நித்தியத்திலே அது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாமல் போகலாம். பூமியிலே, நம்முடைய வாழ்க்கையின் தற்காலிகத்தன்மையைப் பற்றி... 4-6 வசனங்களில், தாவீது தொடர்ந்து பேசுகிறார். ஆனால்... ஏன்? ஒருவேளை..., 7ம் வசனம் அதற்கான பதிலாக இருக்கலாம். பூமியிலுள்ள தற்காலிகமான விஷயங்களின் மீது நம்பிக்கையை வைப்பதே நம்முடைய மனப்பான்மையாக உள்ளது. ஆனால்..., நித்தியத்தை முன்னோக்கில் வைத்திருக்கும் ஒருவருக்கு.., அவருடைய நம்பிக்கை, தேவனில் மட்டுமே இருக்க வேண்டும்.
பாரம்பரியப் பிரகடனம், "ராஜா நீடூழி வாழ்க!" என்கிறது.. ஆனால்... எவ்வளவு காலம்?
ஜெபம்: கர்த்தாவே, நான் தற்காலிகமான பூமியின் காரியங்கள் மீதல்ல..., உம்மில் மாத்திரம் என் நம்பிக்கையை வைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment