நீதியும், உண்மையும், வல்லமையும் உள்ளவர்!
Saturday, May 01, 2021
B.A. Manakala
உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும், உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன். உமது கிருபையையும், உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்து வைக்கவில்லை. சங். 40:10.
நான் கல்லூரியில் பயின்ற போது..., நான் கொஞ்சம்கூட ஈடுபடாத ஓர் ஒழுங்கற்ற நடத்தைக்காக.., ஆசிரியர் ஒருவரால் மிகவும் மோசமாகத் தண்டிக்கப்பட்டேன்! நீதி, நியாயத்திற்கு அங்கே மதிப்பே இல்லை. 'நூறு குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால்..., ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்னும் கோட்பாடு... இந்திய குற்றவியல் நீதி அமைப்பால் பின்பற்றப்படுகிறது. ஆனாலும்.., அதை எப்போதுமே வெற்றிகரமாக செயல்படுத்த முடியுமா?
நம்முடைய தேவன்... நீதியும், உண்மையும், இரட்சிப்பதற்கு வல்லமையும் உள்ளவர் (சங். 40:10). இந்த மூன்றையுமே செய்யக்கூடிய வேறெந்த அமைப்போ, வல்லமையோ இல்லை. அவருடைய நீதியையும், உண்மையையும், இரட்சிக்கக் கூடிய வல்லமையையும் பற்றி..., நம் குடும்பம், சபை, சமுதாயம் என நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் பறைசாற்றுவோமாக.
தேவ ராஜ்ஜியத்தில், நீதி மிக உயரிய மதிப்பைக் கொண்டுள்ளது. அதை நாம் கட்டாயம் பறைசாற்ற வேண்டும்.
ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும், உம்முடைய நீதியைக் கூறி அறிவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment