சிறந்த வழிகாட்டி

Friday, May 14, 2021

B.A. Manakala

உமது வெளிச்சத்தையும், உமது சத்தியத்தையும் அனுப்பியருளும். அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும், உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக. சங். 43:3.

அநேக நபர்கள், எனக்கு நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் யாரேனும் ஒருவரைத் தவறவிட்டிருந்தாலும்..., நான் இன்றைக்கு எப்படிப்பட்ட நபராக இருக்கிறேனோ, அப்படி இருந்திருக்க மாட்டேன்! ஆயினும்..., அவர்களில் ஒருவரையும், சங் 43:3ல் சொல்லப்படுகிற... 'வெளிச்சமாகவும்சத்தியமாகவும் இருக்கிற மெய்யான வழிகாட்டியோடு' ஒப்பிட முடியாது!

புதிய ஏற்பாட்டில்..., இயேசுவே ஒளியாய் இருக்கிறார் (யோவா. 8:12). இயேசுவே சத்தியமாக இருக்கிறார். அவராலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (14:6).       

அவரே சத்தியமாகவும், ஒளியாகவும் இருந்தார். நீங்களும் நானும், அந்த சத்தியத்தையும், வெளிச்சத்தையும் எஞ்சிய உலகிற்கு பிரதிபலித்துக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

வாழ்க்கையில், நீங்கள் பல நபர்களை சந்திக்கிறீர்கள். ஆயினும்..., எப்போதும் உங்கள் கூடவே இருந்து, வழிநடத்துபவர் ஒரே ஒருவர் மாத்திரமே!

ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்க்கையின் எஞ்சிய காலம் முழுவதும்..., சத்தியத்தையும், வெளிச்சத்தையும் பிரதிபலித்துக் காட்ட... எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)     

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்