ஐசுவரியவான்களும் ஏழைகளும்

Friday, June 11, 2021

B.A. Manakala

சிறியோரும், பெரியோரும், ஐசுவரியவான்களும், எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். சங். 49:2.

உங்கள் சொந்தப் புரிதலில்..., 'ஐசுவரியவான்' மற்றும் 'ஏழை' ஆகிய வார்த்தைகளின் அர்த்தம் என்ன? தேவனுக்கு, இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

நம்முடைய புரிந்துகொள்ளுதலில்..., ஐசுவரியவான்கள் என்றால்..., அவர்களுக்கு அதிக பணம் இருக்கலாம்.  ஏழைகளுக்கு பணம் குறைவாகவோ, அல்லது பணம் இல்லாமலோ இருக்கலாம். ஆயினும், கஷ்ட  காலங்களில்..., அவ்விருவருமே தேவனிடம் தான் திரும்ப வேண்டும். மேலும்..., தேவனே பணக்காரரையும்தரித்திரரையும் உண்டாக்கினவர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் (நீதி. 22:2). இறுதியில்.., முக்கியமானது என்னவென்றால்,  'ஐசுவரியவான்களாய் இருப்பது என்றால்... உண்மையில் என்ன' என்பதின் அர்த்தத்தை இருவருமே புரிந்து கொள்கிறது தான் (கொலோ. 2:27).

'மெய்யாகவே ஐசுவரியவான்களாய் இருப்பது என்றால் என்ன' என்பதை அவர்கள் உணரும்  போது..., ஐசுவரியவான் உண்மையிலேயே ஐசுவரியவானாய் இல்லாமல் இருக்கலாம். தரித்திரன் உண்மையிலேயே ஏழையாய் இல்லாமல் இருக்கலாம்!

ஜெபம்: கர்த்தாவே, நான் என்னவாக இருக்கிறேனோ... அதற்காகவும், இப்போது என்னிடம் என்ன இருக்கிறதோ... அதற்காகவும், நன்றியுள்ளவனாய் இருக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்