நாம் அதை வாங்க முடியுமா?

Tuesday, June 15, 2021

B.A. Manakala

எவ்விதத்திலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. சங். 49:8.

சிலர் தங்கள் செல்வத்தை நம்பி, அதைக் குறித்து பெருமைபாராட்டுகிறார்கள் (வச. 6). மரணத்திலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக, ஒருவரும் தேவனுக்கு மீட்புத் தொகையைச் செலுத்த முடியாது (வச. 7).  

நம்மிடம் இருப்பவை.., நம்முடைய மீட்புக்காக செலுத்துவதற்கு போதுமானதாக இருந்திருந்தால்...நம்மில் பலர் எளிதாக அதை வாங்கி இருப்போம். மேலும்..., வேறு சிலருக்கும் கூட மீட்கும் பொருளை செலுத்துவதன் மூலம், நாம் அவர்களுக்கும் உதவியிருப்போம்.

'உங்களுக்குப் போதுமானது இருக்கிறது' என்று நீங்கள் நினைத்தால்..., 'உண்டானவைகளை எல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடுக்க வேண்டும்' என்பதே இயேசுவின் அறிவுரை (மத். 19: 16-21). உங்களுக்கும், 'உங்களுக்கு சொந்தமானவை' என்று நீங்கள் நினைக்கிற அனைத்திற்கும் தேவனே சொந்தக்காரர். அவரே நம் எல்லாருக்காகவும் கிரயம் செலுத்தி இருக்கிறார் (1 யோவா. 2:2).

தேவன் உங்களுக்காக வாங்கியதை, அவரால் மட்டுமே வாங்க முடியும்!

ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக வாங்கியதின் மதிப்பை நான் புரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்