தேவன் பொருட்படுத்தவில்லையா?

Wednesday, June 23, 2021

B.A. Manakala

இவைகளை நீ செய்யும் போது, நான் மவுனமாயிருந்தேன். உன்னைப் போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய். ஆனாலும், நான் உன்னைக் கடிந்து கொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். சங். 50:21.

என் சிறு பிராயத்திலே..., நான் ஒருவனிடமிருந்து தினமும் ஏதாவதொன்றை திருடிக் கொண்டே இருந்தேன். அவன், சில நாட்களுக்கு அமைதி காத்துக் கொண்டே வந்தான். திடீரென ஒரு நாள்..., என்னைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டான்!

உங்களுடைய பாவங்களைப் பற்றி, தேவன் மௌனமாய் இருக்கும் போது..., அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்று நினைக்காதீர்கள். 16-20 வரை உள்ள வசனங்களில்.., வரிசைப்படுத்தப்பட்டுள்ள பாவங்களின் பட்டியல் இதோ...: பாசாங்காய் நடித்தல், அவர் வார்த்தையைப் புறக்கணித்தல், திருடரை அங்கீகரித்தல், விபச்சாரம், துன்மார்க்கம், பொய்கள், மற்றும் அவதூறு. தேவனின் கிருபை தான் நம்மைத் தாங்கி, நிலைநிறுத்துகிறது. ஆனாலும்..., தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபையை மேலும் மேலும் காண்பிக்கிறதற்காக..., நாம் தொடர்ந்து பாவம் செய்ய வேண்டுமோ? ஒருபோதும் கூடாதே! (ரோம. 6:1-2).

தொடர்ந்து பாவம் செய்வதென்பது..., நீங்கள் அமர்ந்திருக்கும் மரக்கிளையை, படிப்படியாக வெட்டுவது போன்றது!

ஜெபம்: கர்த்தாவே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நீர் கவனிக்கிறீர் என்பதை அறிந்து கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்