பார்த்துக் கொண்டே இருத்தல்
Monday, June 28, 2021
B.A. Manakala
என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். சங். 51:9.
நம்முடைய சொந்த கடந்த கால பாவங்களை.., நாம் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்! இன்னும் ஒருபடி மோசமாக..., நாம் பிறருடைய பாவங்களையும் கூட நினைவில் வைத்துக் கொண்டே இருக்கிறோம்! நம்முடைய கடந்த கால பாவங்களுக்காக தேவன் நம்மைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால்..., தேவன் தாவீதை மன்னித்து விட்டார் (2 சாமு. 12:13).
ஒரு முறை மன்னித்துவிட்டால்..., பின்னர் ஒருபோதும் தேவன் நம்முடைய பாவங்களை நினைவில் கொள்வதில்லை (எரே. 31:34). அவருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட..., அது போன்ற செயலைச் செய்ய வேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். தாவீதையும், பத்சேபாளையும், இயேசுவின் வம்ச அட்டவணையில் சேர்க்க.., நாம் ஒருபோதும் விரும்பாதிருக்கலாம்... ஆனால் தேவன் அப்படியில்லை! (மத். 1:6). மன்னிக்கப்பட்டுவிட்ட உங்களுடைய கடந்த கால பாவங்களையும், மற்றவர்களுடையவற்றையும், பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள்.
தேவன் செய்வதைப் போலவே..., உங்களையும், பிறரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தாவே, நீர் ஏற்கனவே மன்னித்துவிட்ட என்னுடைய பாவங்களுக்கான குற்ற உணர்வு நீங்கிய வாழ்க்கை வாழ,எனக்கு உதவி செய்தருளும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment