இது அநீதி இல்லையா?

Sunday, July 04, 2021

B.A. Manakala

பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமை பாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. சங். 52:1.

இந்த கொரோனா பெருந்தொற்றின் மத்தியில்,தேவன் மௌனம் சாதிப்பது... அநீதி இல்லையாநீங்கள் இளமையாக இருக்கும் போதே உங்களுக்கு நரைமுடி இருந்தால்..., அது அநீதியா? உங்கள் எதிரிகள் தூக்கிலிடப்பட்டால்..., அது நியாயமா? அநீதியை நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?

தேவன், தாம் செய்து வருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர் (தானி. 9:14). தேவனோடு வாதிட்டு, மனிதனால் ஜெயிக்க முடியாது (யோபு 33:5). தேவனே யோபை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தார் (யோபு 1:6-12). சாத்தான் உட்பட... யாதொன்றையும், தேவன் நோக்கம் இல்லாமல் உருவாக்கவோ, அனுமதிக்கவோ இல்லை (நீதி. 16:4). இந்த கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து தோன்றியது..., எத்தனை பேர் மரணிப்பர்..., எப்போது அது முடியும்..., உலகம் அதினால் எவ்விதம் பாதிக்கப்படும்... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக தேவன் அறிந்திருக்கிறார்! வேறு ஒருவரும் அறியார்!

மனிதனின் நீதி, அநீதியை உள்ளடக்கியது. தேவன் ஒருவர் மட்டுமே மெய்யாய் நீதியுள்ளவர்!

ஜெபம்: கர்த்தாவே, இப் பெருந்தொற்றின் மத்தியிலும் கூட.., உம்முடைய நீதியைப் புரிந்து கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்