நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?

Friday, July 02, 2021

B.A. Manakala

தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கி விடும். அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும். சங். 51:14.

எனக்கு மனசு சரியில்லை என்றால்..., ஒன்றும் பேசாமல் மௌனம் சாதிப்பேன்! ஆனால்..., உற்சாகமான மனநிலையில் இருக்கையில்..., நான் எக்கச்சக்கம் பேசுவேன்! நீங்கள் எப்படி உங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்?

தேவனுடைய மன்னிப்பை அனுபவிக்கும் போது..., 'தான் எவ்வாறு பாடுவார்' என்பதை தாவீது கற்பனை செய்கிறார் (சங் 51:14). 'தேவன் யார்' என்பதை அறிந்து கொள்ள, நாம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கலாம் (சங். 46:10). ஆனால்..., தேவன் யார் என்பதையும், அவருடைய மன்னிக்கும் சுபாவத்தையும் பற்றி, மெய்யாகவே நாம் அறிந்து கொள்ளும் போது, நம்மால் அமைதியாக இருக்க முடியாது (சங். 100:1).  

மகிழ்ச்சி, நம்மைப் பாட வைக்க வேண்டும் (யாக். 5:13). ஒரு பாவி மனந்திரும்பும் போது... அல்லது அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது..., பரலோகத்திலும் கூட மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது (லூக். 15:10).

நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும்போது, அதைப் பற்றி ஆர்ப்பரிப்பீர்கள்.

ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய பிரசன்னத்தில் மகிழ்ச்சியாக இருக்க எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்