மதி Vs மதியீனம்
Sunday, June 27, 2021
B.A. Manakala
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். சங். 51:6.
"நான் முப்பதே விநாடிகளில், 5000 புள்ளிகளைப் பெற்றுவிட்டேன்!" என்று..., அவர்களுடைய விளையாட்டின் நடுவே..., ஒரு சிறுவன் மற்றொருவனிடம், கூறினான்! இந்த நவீன உலகிலே.., மனிதனுக்கு எக்கச்சக்கமாய் அறிவும், ஞானமும் இருக்கிறது. தன்னுடைய சுய ஞானத்தின் அடிப்படையில், அவன் மற்றவர்களுக்கு ஏராளம் கற்பித்துக் கொண்டே இருக்கிறான்.
ஆனாலும்..., இந்த உலகத்தின் ஞானம், தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாய் இருக்கிறது... என்பதை நினைவில் கொள்ளுங்கள்! (1கொரி 3:19). தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது, மனுஷனுடைய ஞானத்திலும் அதிக ஞானமாய் இருக்கிறது! (1 கொரி. 1:25).
கருவிலேயே தேவன் ஞானத்தை அருளுகிறார்! (சங் 51:6) அவரே ஞானத்தின் மெய்யான மூல ஆதாரம் (நீதி. 2:6).
மனிதனின் மதி..., மதியீனம் ஆக முடியும்; தேவனின் புத்தியீனம்.., புத்தியாய் இருக்க முடியும்!
ஜெபம்: கர்த்தாவே, எப்போதுமே மெய் ஞானத்தைத் தேடுவதற்கு, எனக்குக் கற்றுத் தாரும். ஆமென்!
(Translated from English to Tamil by Catherine Joyce)
Comments
Post a Comment