யார் உங்களை தப்புவிக்க முடியும்?

Thursday, July 15, 2021

B.A. Manakala

தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும். சங். 54:1.

பெலிஸ்தர்கள், இராட்சத வீரனான கோலியாத்தை தங்கள் மீட்பராகவும், பாதுகாவலனாகவும் தேர்ந்தெடுத்தனர். சிறிய  இளைஞனான தாவீதோ..., அந்த இராட்சதனுக்கு விரோதமாக யுத்தம் செய்ய.., தேவனைத் தேர்ந்தெடுத்தான். இறுதியில்..., அந்த இராட்சதன் கொல்லப்பட்டான்! (1 சாமு. 17).

பெரும்பாலும்..., நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக, நம்மை உணர்கிறோம். இது ஒருவேளை... பரவாயில்லை எனலாம். ஆனால்.., நாம் தேவனை விட உயர்ந்தவர்கள் என்று நம்மை நினைத்தால்..., என்ன செய்வது? உண்மையைச் சொல்லப்போனால்.., கோலியாத் அப்படித்தான் உணர்ந்ததாகத் தோன்றுகிறது. "நீ எனக்கு விரோதமாக ஒரு தடியோடு வருவதற்கு, நான் என்ன ஒரு நாயா?" என்று அவன் தாவீதைப் பரிகாசம் பண்ணினான். கர்த்தரே உங்களுடைய வலிமைமிக்க பாதுகாவலர் (உபா. 32:4). அவர் நம்மை சாத்தானிடம் இருந்தும்கூட காப்பாற்றுகிறார்.

சரியான பாதுகாவலரை நீங்கள் தேர்வு செய்தால், உங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது!

ஜெபம்: கர்த்தாவே, என் மீட்பராகவும், பாதுகாவலராகவும் உம்மையே நான் எப்போதும் தேர்வு செய்வதற்கு, எனக்கு உதவி செய்தருளும். ஆமென்!

 

(Translated from English to Tamil by Catherine Joyce)

 

Comments

Popular posts from this blog

ஆத்தும தாகம்

இரக்கமுள்ள தேவன்

நித்திய ஆசீர்வாதம்