யார் உங்களை தப்புவிக்க முடியும்?

Thursday, July 15, 2021 B.A. Manakala தேவனே , உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து , உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும். சங். 54:1. பெலிஸ்தர்கள் , இராட்சத வீரனான கோலியாத்தை தங்கள் மீட்பராகவும் , பாதுகாவலனாகவும் தேர்ந்தெடுத்தனர். சிறிய இளைஞனான தாவீதோ... , அந்த இராட்சதனுக்கு விரோதமாக யுத்தம் செய்ய.. , தேவனைத் தேர்ந்தெடுத்தான். இறுதியில்... , அந்த இராட்சதன் கொல்லப்பட்டான்! (1 சாமு. 17). பெரும்பாலும்... , நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக , நம்மை உணர்கிறோம். இது ஒருவேளை... பரவாயில்லை எனலாம். ஆனால்.. , நாம் தேவனை விட உயர்ந்தவர்கள் என்று நம்மை நினைத்தால்... , என்ன செய்வது ? உண்மையைச் சொல்லப்போனால்.. , கோலியாத் அப்படித்தான் உணர்ந்ததாகத் தோன்றுகிறது. "நீ எனக்கு விரோதமாக ஒரு தடியோடு வருவதற்கு , நான் என்ன ஒரு நாயா ?" என்று அவன் தாவீதைப் பரிகாசம் பண்ணினான். கர்த்தரே உங்களுடைய வலிமைமிக்க பாதுகாவலர் (உபா. 32:4). அவர் நம்மை சாத்தானிடம் இருந்தும்கூட காப்பாற்றுகிறார். சரியான பாதுகாவலரை நீங்கள் தேர்வு செய்தால் , உங்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது! ஜெபம்: கர்த்தாவே , என் மீட்பராகவ...