Posts

Showing posts from August, 2020

தேவன் அரசாளுகிறார்.

Image
B.A. Manakala தேவன் பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும் பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும். இனி இராதபடிக்கு, அவர்களை நிர்மூலமாக்கும். சங். 59:13. 'இவரை பிரதமராக நான் ஏற்றுக்கொள்ளவில்லை' - இவ்வாறு ஒருவேளை நான் அறிக்கை விடுகிறேன் என்றால், அதற்காக அவர் இனி பிரதமர் இல்லை என்று அர்த்தமாகிவிடுமா? இங்கே தாவீது ஜெபிக்கிறதைப் போல, தேவனே எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி செய்கிறார் என்பதை பூமியெல்லாம் அறிந்து கொள்ளத்தக்கதாக,  தேவன் எப்பொழுதும் அவரது உக்கிரத்திலே தோன்றி, ஜனங்களை நிர்மூலமாக்க வேண்டிய அவசியம் இல்லை (சங். 59:13). என்ன காரியமானால் என்ன, அவரே ராஜா! (சங். 97:1). தேவன் அரசாளுகிறார் என்பதை எப்போதாவது ஒரு சில வேளைகளில் மட்டுமே நாம் உணரக் கூடும்: வெள்ளம் ஏற்படுகையில் (ஆதி. 6); கடல் இரண்டாகப் பிளக்கையில் (யாத். 14:21); ஏதாவது அதிசயம் நடக்கையில், சர்வதேச பெருந்தொற்று பரவல் காலத்தில், நமக்கு அருமையானவர்கள் மரிக்கையில்,... இன்னும் இது போன்ற நிகழ்வுகளில்... 'எல்லாக் காலங்களிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனே அரசாளுகிறார்' என்பத...

பெருமை, சாபம் மற்றும் பொய்!

Image
B.A. Manakala அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும், சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையிலே அகப்படுவார்கள். சங். 59:12. ஒரு நாள், என்னுடைய மூக்குக் கண்ணாடி தொலைந்து போனது. நான் அதைத் தேடிக்கொண்டே இருந்தேன். கடைசியில், என் குடும்பத்தார் என்னை முகம் பார்க்கிற கண்ணாடியில் போய் பார்க்கச் சொன்னபோது, நான் அதைக் கண்டுபிடித்தேன். அது என்னுடைய தலையின் மேலே தான் இருந்தது! உங்களுக்குள்ளேயே இருக்கிற பெருமை, சபித்தல், பொய் ஆகியவற்றால் நீங்கள் சிறைப்படுத்தப்பட முடியும் என்று, இங்கே தாவீது கூறுகிறார் (சங். 59:12). நம்முடைய சத்துருக்களால் மட்டுமே நாம் சிறைபிடிக்கப்படுகிறோம் என்று பொதுவாக நாம் நினைக்கிறோம். பெரும்பாலான வேளைகளில், நம்முடைய எதிரி, நமக்குள்ளேயே இருக்கிறதை நாம் உணர்கிறதே இல்லை. நமக்குள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பல சமயங்களில் நாம் பார்க்கத் தவறுகிற அதே வேளை, மற்றவர்கள் அவற்றை எளிதாகக் கவனித்துவிடக் கூடும். இது மனித இயல்பு.  தேவனுடைய வார்த்தையானது, உங்களுக்குள்ளே இருக்கிற எல்லாவற்றையும், உங்களுக்கு நீங்களே பார்க்க முடியாதவற்றையு...

கர்த்தர் நம் கேடகம்

Image
B.A. Manakala அவர்களைக் கொன்று போடாதேயும். என் ஜனங்கள் மறந்து போவார்களே. எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப் போடும். சங். 59:11. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை,  எரிகிற அக்கினிச் சூளைக்குள்ளே தூக்கிப் போடுகையில், தேவன் தாமே அவர்களுடைய கேடகமாக அங்கே தோன்றினதால், அவர்கள் ஒரு சேதமும் அடையாதிருந்தார்கள் (தானி. 3:24-25). இங்கே தாவீது தேவனை, 'எங்கள் கேடகமாகிய கர்த்தாவே' என்று குறிப்பிடுகிறார். ஒருதடவை, தாவீது கோலியாத்துக்கு விரோதமாக யுத்தம் பண்ணும் பொருட்டு, சவுல் ராஜாவால் வழங்கப்பட்ட மனித போர்க்கவசத்தை அணிந்து கொள்ள முயன்றதை நினைத்துப் பாருங்கள். தேவன் தாமே தாவீதின் கேடயமாய் இருந்தார்; அங்கே கோலியாத்தின் கேடயம் வேலை செய்யவில்லை!  கோலியாத் போன்ற ஒரு ராட்சதனுக்கு எதிராக வேறு யார் கேடகமாக இருக்க முடியும்?  அக்கினி ஜூவாலைக்குள்ளே, சிங்கங்களின் கெபிக்குள்ளே, வெள்ளத்திலே, சிறைச்சாலையிலே, பெரும்புயல் கால சூழ்நிலையிலே..?  ஆனால், நீங்கள் வாழ்வின் கடினமான காலகட்டங்கள் வழியாகக் கடந்து செல்கையிலே, ...

என் தேவன்

Image
B.A. Manakala என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். சங். 59:10. "இவர்கள் என்னுடைய அம்மா" என்று அவளுடைய குழந்தைகளுள் ஒன்று, அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு கத்தியது. இதைக் கேட்டவுடனே, ஒன்றன் பின் ஒன்றாக வேறு இரண்டு உடன்பிறப்புகள் அவளிடம் ஓடிச் சென்று, அதே போல் உரிமை கொண்டாடத் தொடங்கின. அந்தத் தாய், அவர்கள் எல்லாரையும் ஒருமிக்க பிடித்துக் கொண்டு, "நீங்கள் எல்லாரும் என்னுடையவர்கள்" என்று கூறின போது தான் அந்தச் சண்டை நின்றது.  தாவீதுக்கு, தேவனோடு தனிப்பட்ட உறவு இருந்ததினால் தான், அவரை 'என் தேவன்' என்று நம்பிக்கையோடு குறிப்பிடுகிறார். தேவன் உங்களோடும் என்னோடும் தனிப்பட்ட விதத்திலே, நெருங்கிய உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர், தனிப்பட்ட உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, முதன்முதலாக 'ஆதாம்' என்ற ஒரே ஒரு மனிதனை மட்டும் உருவாக்கினார். அவர் உங்களையும் கூட அதே நோக்கத்தோடு தான் சிருஷ்டித்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் அவரை 'என் தேவன்' என்...

நீண்ட காலம் காத்திருக்கிறீர்களா?

Image
B.A. Manakala அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். சங் 59:9. பல வருடங்களுக்கு முன்பு, நாங்கள் வட இந்தியாவிலுள்ள தொலைதூர கிராமம் ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நகரத்திற்குத் திரும்புவதற்காக, அந்த கிராமத்தாருடைய ஆலோசனையின் பேரில்,  காலை 10 மணிக்கெல்லாம் நாங்கள் ஒரு பேருந்துக்காகக் காத்திருந்தோம். மதியம் 2 மணி வரை சென்ற அந்த மிக நெடிய காத்திருப்புக்குப் பின்னர், நாங்கள் வேறொரு பேருந்தில் ஏறி, நேர் எதிரான திசையில் சென்றோம். ஏனெனில், நாங்கள் காத்துக்கிடந்த அந்த பேருந்து, கடைசி வரை வரவே இல்லை!  தாவீது, தேவன் தன்னை தப்புவிக்க வரும்படி, அவருக்காகக் காத்திருக்கிறார். ஏனென்றால், தன்னுடைய காத்திருப்பு பிரயோஜனமுள்ளது என்று அவர் அறிந்திருந்தார் (சங். 59:9). 'காத்திருத்தல்' என்பது வழக்கமாகவே கடினமான ஒரு காரியம் தான். பொதுவாக, குறிப்பிட்ட ஒரு கால கட்டத்திற்குப் பின்னர், நாம் காத்திருப்பதை நிறுத்தி விடுவதுண்டு. எந்த அளவுக்கு நாம் காத்திருக்க முடியும் என்பது, எந்த அளவுக்கு நாம் பொறுமையாய் இருக்கிறோம் என்பதைப் பொருத்தது; எந்த அளவுக்கு நாம் ...

வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை!

Image
B.A. Manakala இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது. கேட்கிறவன் யார் என்கிறார்கள். சங். 59:7. நான் இளமையாக இருந்த போது, விலை மதிப்புள்ள ஒரு கோப்பையைக் கை தவறி கீழே போட்டு உடைத்து விட்டேன். எனது அம்மா என்னிடம், "அதனால் பரவாயில்லை, கவலைப்படாதே" என்று கூறினார்கள். மிகவும் பயம் நிறைந்த தருணமாய் அது எனக்கு இருந்தது. ஆனால் என் அம்மாவின் வார்த்தைகளை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!  இனிய சொற்கள் தேன் போன்றவை. அவைகள் ஆத்துமாவுக்கு மதுரமும், சரீரத்திற்கு ஔஷதமும் ஆகு‌ம் (நீதி. 16:24). வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாய் இருக்க முடியும் என்பதும், அது பிறருக்கு தீங்கிழைக்கிறவைகளாகவோ அல்லது பிறரை ஆசீர்வதிக்கிறவைகளாகவோ இருக்க முடியும் என்பதும் நம் எல்லாருக்குமே தெரியும்.  நாம் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நம் உள்ளத்தில் உள்ளவற்றின் வெளிப்புற வெளிப்பாடுகளே ஆகும். நம்மிலே கிரியை நடப்பிக்கிற பரிசுத்த ஆவியானவர், ஆவியின் கனியாகிய அன்பு, நீடிய பொறுமை, சாந்தம் ஆகியவற்றை நம்மில் உருவாக்குகிறார். அவைகள் ஆசீர்வாதமான வார்த்தைகளை நம்மில் உண்டாக்குகின்ற...

தெரு நாய்களை சட்டை பண்ணாதேயுங்கள்.

Image
B.A. Manakala அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப் போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். சங். 59:6. எங்களுடைய சுற்றுப்புறத்திலே ஏராளம் நாய்கள் உள்ளன. இரவிலே அவைகள்  உரத்த சத்தமாய் ஊளையிடுவதால், எங்கள் தூக்கம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.  இரவிலே வெளியே சென்று வர வேண்டுமென்றாலே, சில சமயம்  எங்களுக்கு பயமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வழியே சென்றால், பொதுவாகவே அவைகள் கண்டு கொள்வதில்லை.  நம் சத்துருக்கள், இரவிலே சுற்றித்திரிகிற நாய்களைப் போல இருக்கிறார்கள். இரவு நேரங்களில், அவர்கள் மேலும் ஆபத்தானவர்கள். தேவன் கூட இதுபோன்ற நபர்களைப் பார்த்து நகைக்கிறார் (சங். 59:8). அவர் அவர்களைக் கவனித்துக் கொள்ளுவார். ஆனால், நாம் நம்முடைய வழியில் செல்லவும், வேறு மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து, நமது இலக்கிலே கவனத்தை செலுத்தவும், கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.  உங்கள் கவனம், உங்களுடைய சத்துருவால் திசைதிருப்பப்படுகையில் அவன் மகிழ்கிறான். உங்களைத் தொல்லையிலே இழுத்து விடுவதற்கு, அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை எல்லாவற்றையும் அவன் செய்வான்.  நீங்கள் தெ...

பரலோக சேனைகளின் தேவனாகிய கர்த்தர்!

Image
B.A. Manakala சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ் செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். சங். 59:5. ஒரு நாள், என் வீட்டிலே, எறும்பு ஒன்று எதையோ சுமந்து செல்கிறதை நான் கண்டேன். அதற்குப் பின்னாலேயே மற்றொரு எறும்பும் அதே பொருளைத் தூக்கிக் கொண்டு செல்வதை விரைவிலேயே நான் உணர்ந்தேன். இறுதியாக, அவை எங்கே இருந்து வருகின்றன என்று நான் கண்டுபிடித்த போது, எனக்கு ஒரே  ஆச்சரியம்! அங்கே ஆயிரக்கணக்கான எறும்புகள் சேர்ந்த ஒரு பெரும் படையே இருந்தது!  தாவீது தேவனை வெறுமனே 'தேவனே' என்று குறிப்பிடாமல், 'சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே' என்று குறிப்பிடுகிறார். ஒருவேளை, தேவனை ஓர் மிகப்பெரிதான சேனையை உடையவராக தாவீது பார்த்ததே, தன் சத்துருவைச் சிறிதாகக் காணும்படியாக அவருக்கு உதவியிருக்கலாம் (சங். 59:5). நாம் பல சமயங்களில், நம்முடைய கல்வி, ஆரோக்கியம், அடிப்படை வசதிகள் போன்ற சிறிய தேவைகளுக்காக மட்டுமே தேவனை நம்புகிறோம். நீங்கள் கற்பனை செய்யக்கூடியதை விட, பெரிதான  காரியங்களை தேவனால் செய்ய முடியும். அவருக்கு ஒப்பானவர் ஒரு...

நான் தவறொன்றும் செய்யவில்லை!

Image
B. A. Manakala என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணை செய்ய விழித்து, என்னை நோக்கிப் பாரும். சங். 59:4. எனது பள்ளி நாட்களில், சில மேஜைகள் கீழே விழுந்த போது, நானும், எனது மூன்று நண்பர்களும் எனது முதல்வரால் மோசமாக தண்டிக்கப்பட்டோம். நான் குற்றமற்றவன்... ஏனெனில், நான் வேண்டுமென்றே அதில் ஈடுபடவில்லை.  இங்கே சங்கீதக்காரன் சொல்கிறது, நமக்கும் கூட அடிக்கடி உண்மையாகிறது (59:4). நினைவில் கொள்ளுங்கள்.., காரணமே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் தாக்கப்படலாம். சொல்லப்போனால், நீங்கள் தேவபக்தியுடன் இருக்கிற போது தான் உங்களுக்கு அதிகமான தொல்லைகள் இருக்கலாம் (2 தீமோ 3:12). ஆனால் அதெல்லாம் தேவன் உங்களைப் பாதுகாக்கவில்லை என்பதினால் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  'எந்தத் தவறும் செய்யக்கூடாது' என்கிற உங்களது விருப்பம், உங்களைச் சுற்றி இருக்கிற அனைவராலும் பாராட்டப்படுகிறது; தேவனும் கூட உங்களில் மகிழ்ச்சி அடைகிறார். கனிவாய், அதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.  தொடர்ந்து நன்மை செய்கிறதிலே நீங்கள் எவ்விதம் கவனத்தை செலுத்தலாம்?  வாழ்வி...