Posts

Showing posts from December, 2020

எனக்குச் செவிசாய்க்கும் செவி!

Image
B.A. Manakala உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து , என்னைக் காத்தருளும். உமது செவியை எனக்குச் சாய்த்து என்னை இரட்சியும். சங். 71:2. சமீபத்தில்... , ஒரு முதியவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்குக் கிட்டத்தட்ட காது கேட்கவில்லை. நான் அவரோடு பேசின போதெல்லாம்... , அடிக்கடி அவர் தனது வலது கையை தன் வலது காதுக்குப் பின்னால் வைத்து , என்னிடமாய் தன் செவியை சாய்த்துக் கொண்டு... , நான் பேசியதை மறுபடியும் கூறும்படி என்னிடம் கேட்டார். அவருடன் நான் மிகவும் உரத்த தொனியில் பேச வேண்டியதாய் இருந்தது. தான் மீட்கப்படவும் , காக்கப்படவும் விரும்பினதால்... ,  தேவனுடைய செவியை தன்னிடமாய் திருப்புவதற்காக... சங்கீதக்காரருடைய ஜெபம் இருந்தது (சங். 71:2). நம்முடைய கூப்பிடுதலைக் கேட்கக் கூடாதபடிக்கு தேவனுடைய செவி மந்தமாகவில்லை (ஏசா. 59:1). அவரைத் தொழுதுகொண்டு , அவருடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு , அவர் செவிகொடுக்கிறார் (யோவா. 9:31). நான் கோபமாயிருந்து , அபத்தமானவற்றைப் பேசுகையில்... , கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்! கர்த்தர் என்னிடமாய்த் தன் செவியைச் சாய்க்கைய...

நான் ஏன் தேவனிடம் வருகிறேன்?

Image
B.A. Manakala கர்த்தாவே , உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். சங். 71:1. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர்... , நான் எனது கைபேசியை ( Moblie phone) , தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டுமே எடுப்பேன். ஆனால் இன்றோ.... , வெறும் தொலைபேசி அழைப்புகளுக்காக மட்டுமல்லாது.... , வேதத்தை வாசிக்கவும் , எனது ஜெபக்குறிப்புகளைப் பார்க்கவும் , செய்திகளை வாசிக்க , கேட்க அல்லது பார்க்கவும் , பொழுதுபோக்குக்காகவும் , வாகனத்தில் பயணிக்கையில் சரியான பாதையைக்  கண்டறியவும் , கால்குலேட்டராகவும் ( Calculator) ,  புகைப்படக்கருவியாகவும் ( Camera) , பதிவு செய்யும் கருவியாகவும் ( recorder) ,... இன்னும் இது போன்ற  பல்வேறு  காரியங்களுக்காகவும் நான் என்னுடைய கைபேசியைப் பயன்படுத்துகிறேன். சுருங்கக் கூறின்... , இது என்னுடைய கணினி செய்யக்கூடியதைக் காட்டிலும் அதிகமாகச் செய்கிறது! தேவனை அறிந்து கொள்கிறதினால் உண்டாகிற.... பாதுகாப்பு , மீட்பு , வெட்கப்பட்டுப் போகாத நிலை.... இன்னும் இது போன்ற பல்வேறு பலன்கள் பற்றி இந்த சங்கீதம் பேசுகிறது. மெய்யான தேவனை அறிகிறதினால் வரும் சில நன்மைகளை , நாம் கேட்டிருக்...

வெறும் ஏழையா? அல்லது தேவைமிகுந்தவரா?

Image
B.A. Manakala நானோ சிறுமையும் எளிமையுமானவன். தேவனே , என்னிடத்தில் தீவிரமாய் வாரும். நீரே என் துணையும் , என்னை விடுவிக்கிறவருமானவர். கர்த்தாவே , தாமதியாதேயும். சங். 70:5. பெதஸ்தா என்னும் குளத்தருகே , முப்பத்தெட்டு வருடங்களாக வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதன் கிடந்தான். தண்ணீர் கலக்கப்படுகையில்.... , முதலில் குளத்திற்குள் இறங்குகிற யாராயினும்... , அவர் சொஸ்தமாவார். அவ்வழியாகக் கடந்து போன இயேசு... , அம்மனிதனிடம் , " சொஸ்தமடைய வேண்டும் என்று நீ  விரும்புகிறாயா ?" என்று கேட்டார். ஏழையாக இருப்பது ஒரு நிலை என்றால் , தேவையோடு இருப்பதென்பது மற்றொரு நிலை. நிச்சயமாக... , சுகமடைய வேண்டும் என்று விரும்பினதால் தான் , அந்த மனிதன் அக்குளத்தருகே இருந்தான். ஆனால்... , இயேசு ஏன் அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார் என்று நான் வியக்கிறேன். அவன் பல வருடங்களாக அங்கேயே இருந்தாலும் கூட.... , ஒருவேளை அவன் ஏமாற்றமடைந்து , நம்பிக்கையற்றவனாய் மாறியிருந்திருக்கக் கூடும். நம்முடைய தற்போதைய நிலையிலேயே நாம் திருப்தியடைந்து விட்டால் , அதற்கு மேல் நமக்கு ஒரு தேவையும் இல்லை. உண்மையில்... , பூமிக்குரிய பார்வையில் , ந...

தேவன் பெரியவர்!

Image
B.A. Manakala உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக. உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. சங். 70:4. ' கிரிக்கெட் எங்கள் மதம் ' .... என்பது ஏராளமான இந்தியர்கள் ஆரவாரித்துச் சொல்லும் பிரபலமான ஒரு கோஷம் ஆகும். விளையாட்டை விரும்புகிறவர்களும் , அதன்மீது பைத்தியமாய் இருக்கிறவர்களும் , இம்மாதிரியான ஒரு சுலோகத்தைப் பிடித்துக் கொள்வார்கள். ' எனக்கு whatsapp பண்ணு ', ' நான் busy யாக இருக்கிறேன் ', ' என்னுடைய mobile phone ', ' நாம் மகிழ்ந்திருப்போம் ', ' எனக்கு வேலை கிடைத்து விட்டது '.... இது போன்ற சிலவற்றை , நம்முடைய சுலோகங்களாகக் கருத முடியுமா ? நாம் அடி‌க்கடி என்ன பேசுகிறோமோ , அதில் இருந்தே... , நம்முடைய வாழ்க்கையின் கருப்பொருள் தெளிவாக விளங்கும். தேவனை மெய்யாகவே அறிந்தவர்களுக்கு , ' தேவன் பெரியவர் ' என்பதே சிறந்த முழக்கமாகும். இதை , எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிக்கடி... , நாம் திரும்பத் திரும்ப சொல்லுகையில்... , அது நம்முடைய வாழ்க்கையிலும் , நம்மைச் சுற்...

விரைவான உதவி

Image
B.A. Manakala தேவனே , என்னை விடுவியும். கர்த்தாவே , எனக்குச் சகாயஞ் செய்யத் தீவிரியும். சங். 70:1. இயேசுவுக்கு.... , அவருடைய அருமை நண்பன் லாசரு வியாதியாய் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும் , இயேசு தாம் தங்கியிருந்த இடத்திலேயே அடுத்த இரண்டு நாட்களும் தங்கினார். அவர் போய்ச் சேர்ந்த வேளையில்... , லாசரு மரித்து , அவனுடைய சரீரம் கல்லறையில் வைக்கப்பட்டு , நாலு நாட்கள் ஆகியிருந்தது! அவனுடைய சகோதரி மார்த்தாள் இயேசுவிடம் , " நீர் இங்கு இருந்திருந்தீரானால்... , என்னுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான்" என்று கூறினாள். பொதுவாக..... , தாவீது விரும்பியதைப் போலவே... ,  நமக்கும் நம்முடைய தேவைகளுக்கு விரைவான உதவி தேவைப்படுகிறது (சங். 70:1). தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச. 3:11). ஆனால் , அவருடைய வேளை , நமது நேரத்தோடு எப்போதுமே பொருந்தி வராமல் போகலாம். சில சமயங்களில்... , அவர் நமக்குச் சரியான வேளையில் உதவி செய்யாதது போலத் தோன்றலாம். மனிதனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால்... , ' இயேசு தாமதமாக வந்ததால் தான் அவளுடைய சகோதரன் மரித்துப் போனான் ' என்று...

அன்பும் கீழ்ப்படிதலும்

Image
B.A. Manakala அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். சங். 69:36. எனக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் கிடையாது! இருப்பினும்.... , என்னுடைய குடும்பத்தை நான் நேசிப்பதாலும் , அவர்களோடு அளவளாவ விரும்புவதாலும்... , வாரம் ஒருமுறை சமையலறைக்குள் சென்று சமைப்பதில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். என் மனைவியும் , மகளும் சமைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள். நான் அவர்கள் சமைப்பதனைத்தையும் ரசித்து உண்கிறேன். இது.... , இன்னும் அதிகமாய் சமைப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது. இப்படி நாங்கள் ஒன்றாக இருக்கிற நேரங்களை நாங்கள் விரும்புகிறோம். தேவனால் பூமியில் ஏற்படுத்தப்பட்ட என்ன ஆசீர்வதமான ஒரு உறவு இது! அன்பும் , கீழ்ப்படிதலும் ஒன்றோடொன்று இணைந்தே செல்கின்றன. வேறுவிதமாகக் கூறின் , அன்புத் தாழ்ச்சியே கீழ்ப்படியாமைக்கான முக்கிய காரணம். தேவனுடனும் , மனிதர்களுடனுமான  நம்முடைய உறவு.... , அன்பால் பிணைக்கப்பட்டிருக்குமானால்.... , சந்தோஷம் , சமாதானம் , நீடிய பொறுமை , தயவு , நற்குணம் , விசுவாசம் , சாந்தம் , மற்றும் இச்சையடக்க...

வானமும் பூமியும் துதிக்கிறது!

Image
B.A. Manakala வானமும் , பூமியும் , சமுத்திரங்களும் , அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது. சங். 69:34. சமீபத்தில்... , நான் இணையவழியில் ஒரு மேஜை வாங்கினேன். அது வந்த பின்னர்... , அதனுடைய பாகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதாய் இருந்தது.  எங்களுக்காக , குறைந்த கட்டணத்தில் அதைப் பொருத்தித்தர அந்த நிறுவனமே முன்வந்தாலும் , நானாக அதை ஒருங்கிணைக்க வேண்டுமென மிகுந்த ஆவலாய் இருந்தேன். அதை இணைத்து முடிக்க சில மணி நேரங்கள் எனக்கு எடுத்துக்கொண்டாலும் ,  அதை நானே பொருத்தி முடித்த போது.... , அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. தேவனுடைய எல்லாப் படைப்புகளும் , தேவனைத் துதிக்கின்றன! (சங் 69:34). ஆனால்... உயிரற்ற ஜடப்பொருட்கள் எப்படித் துதிக்கின்றன... ?  ஆதியிலே தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கையில்... , ஒவ்வொரு நாளின் முடிவிலும் , தான் படைத்த யாவையும் தேவன் நல்லது என்று கண்டார். அவர் செய்தவற்றில் அவர் இன்பம் கண்டார். ஒருமுறை இயேசு கல்லுகள் கூப்பிடுவதைப் பற்றிக் குறிப்பிட்டார் (லூக். 19:40). தேவனின் படைப்புகளாக... , நாம் அவரை எப்போதும் துதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறோம். ...

எளியவர்களின் கதறல்

Image
B.A. Manakala கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார். கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். சங். 69:33. தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக... , அரசாங்கத்திடமிருந்து உதவி தேவைப்படும் மக்களை வகைப்படுத்த... , இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட திறன்மதிப்பீடே ' வறுமைக்கோடு ' என்பதாகும். அதன்படி.. , இந்திய மக்கள் தொகையில் 25% சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர். தேவன் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார் (சங். 69:33). ஐசுவரியவானுக்கும் , ஏழைக்கும் இடையே , ஏதோ ஒன்று பொதுவாக உள்ளது. ஆம்! தேவனே அவ்விருவரையும் உண்டாக்கினார் (நீதி. 22:2). எனவே... , தேவன் அனுமதித்திருக்கிறபடியால் தான் அவ்விருவரும் இருக்கின்றனர். ஏழைகளுக்கும் , ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் , தேவன் காட்டுகிற சிறப்பான அக்கறை.. , வேதம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது (சங். 140:12). ஆயினும்... , நம்முடைய ஜெபங்களை தேவன் கேட்பதற்கு , நாம் ஏழைகளாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தேவனில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் , எப்போதும் ஆவிக்குரிய ஆகாரத்தின் தேவையை உணர முடியும். ' ஆவியில் எளிமை ' ( மத். 5:3) என...

சாந்தகுணமுள்ளவர்கள் தேவனை தரிசிப்பார்கள்

Image
B.A. Manakala சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். தேவனைத் தேடுகிறவர்களே , உங்கள் இருதயம் வாழும். சங். 69:32. ஒருமுறை , ஒரு பள்ளியின் முதல்வர் ,  கூச்சல் நிறைந்த ஒரு வகுப்பறைக்குள்... , ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். மாணவர்களுள் ஒருவன்... , யாரோ தங்களைக் கூர்ந்து நோக்குவதைக் கவனித்தாலும்... , அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் , முதல்வரைப் பார்த்துவிட்ட வேறு இரண்டு மாணாக்கர்... , மிகவும் அமைதியாகி... , மெதுவாக மற்றவர்களையும் எச்சரித்தனர்! சாந்தகுணமுள்ளவர்கள் மட்டுமே தேவனைக் காண முடியும் என்பதை தாவீது இங்கே அறிந்துணர்கிறார் (சங். 69:32). மோசே , பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராய் இருந்தார்! (எண் 12:3). வேதத்திலே... , கர்த்தரை முகமுகமாய் அறிந்த ஒரே மனிதர் அவர் தான்! (உபா 34:12) நாம் எவ்வளவு தாழ்மையுடன் இருக்கிறோமோ... , அவ்வளவு நன்றாக , நம் தேவனை நம்மால் தரிசிக்க முடியும். நாம் எவ்வளவு அதிகமாக நம் தேவனைப் பார்க்கிறோமோ... , அவ்வளவாய் நாம் தாழ்மையுடன் இருப்போம்! இது ஒரு அற்புதமான உறவு. தேவனோடு நமக்குள்ள உறவை அளவிடுவதற்கு , மற்றவர்கள் பயன்படுத்துகிற மிக ...

இது கர்த்தரைப் பிரியப்படுத்தும்

Image
B.A. Manakala கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும் , இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். சங். 69:31. ஒரு வீட்டிற்கு விருந்தினர்களாகச் சென்றிருந்த நானும் என் நண்பரும்... , அங்கே உணவருந்தினோம். அதில் பரிமாறப்பட்ட பொரியல்களுள் ஒன்று , என் நண்பருக்குப் பிடிக்காதது என்பதால்... , மீதமுள்ள உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடும்பொருட்டு ..... , அவர் அப்பொரியலை வேகமாகச் சாப்பிட்டு முடித்து விட்டார். ஆனால் , எங்களுக்கு விருந்தளித்தவரோ.. , என் நண்பருக்கு அந்தப் பொரியல் மிகவும் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டதால் , அதே கூட்டு அவருக்கு இன்னும் அதிகமாகப் பரிமாறப்பட்டது! தன்னுடைய துதி , பாட்டு , நன்றிபலி மற்றும் ஆராதனையே தேவனைப் பிரியப்படுத்தினது... , என்று சொல்லக் கூடிய நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது (சங். 69:30-31). தேவனுக்குப் பிரியமில்லாத ஏதோ ஒன்றையே நான் தொடர்ந்து அவருக்குக் கொடுத்துக் கொண்டிருப்பேனானால்... , அது... , என் நண்பருக்குப் பிடிக்காத பதார்த்தத்தை அவருக்குப் பரிமாறினது போலத்தான் இருக்கும்! நம்முடைய காணிக்கைகளோடு கூடிய... நமது மனப்பான்மை , நேர்மை , அன்பு இன்னும் இதுபோன்ற.....

பின்னர் நான் துதிப்பேன்!

Image
B.A. Manakala தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து , அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். சங். 69:30. எங்களுடைய குழந்தைகளை , வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக... , பெற்றோராகிய நாங்கள் , அவர்களுக்குச் சில அற்புதமான வெகுமதிகளை வழங்குவதுண்டு. மதிப்பிடுதலும் , வெகுமானம் கொடுப்பதும் , பொதுவாக வார இறுதியில் தான் இருக்கும். அவர்கள் வெகுமதியைப் பெற்றவுடன் , அடுத்த வாரத்திற்காகவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். தேவன் , நம்முடைய பாடுகளிலிருந்தும் , வேதனைகளிலிருந்தும் நம்மை இரட்சித்துள்ளதால் , தாவீதைப் போல , நாமும் அவரைத் துதிக்க வேண்டியது அவசியம் (சங். 69:29-30). சில வேளைகளில்... , தேவன் நமக்குச் செய்திருக்கிற நன்மைகளுக்காக அவரைத் துதிக்கும்படி நமக்கு நினைப்பூட்ட... , மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால்... , நம்முடைய வாழ்வின்  ஒவ்வொரு க்ஷணப் பொழுதும் தேவனைத் துதிப்பதற்குப் பழகிக் கொள்வது முக்கியமானது.... ஏனென்றால் , அவர் இந்த பூமியிலும் , நமக்காகவும் செய்திருப்பவை எல்லாமே துதிக்கப்படத்தக்கவை. எனவே , தேவனுக்காக நாம் செலுத்தும் துதியானது , அவர் நமக்குத் தனிப்பட்ட விதத்திலே என்ன செய்திருக்க...

அவர்கள் பெயர்களை அழிக்கவா?

Image
B.A. Manakala ஜீவ புஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக. நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. சங். 69:28. ஒரு சுற்றுலாவின் போது... , நாங்கள் ஒரு குறிப்பிட்ட கேளிக்கை சவாரிக்குச் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் நான்கு பேர் இருந்தோம். ஆனால் அந்த சவாரிக்கு , மூன்று இருக்கைகள் மட்டுமே மீதம் இருந்தன. எங்களில் ஒருவருக்கு , அந்த சவாரிக்குச் செல்ல ஆசை இருந்தாலும் , அவர் மனமுவந்து... , " நான் விலகிக் கொள்கிறேன். நீங்கள் மூன்று பேரும் செல்லலாம்" என்று கூறினார். இந்த வசனத்தில் (சங் 69:28) , ' தன்னுடைய சத்துருக்களின் பெயர்களை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போட வேண்டும் ' என்பது  தாவீதின் ஜெபமாய் இருக்கிறது! இஸ்ரவேலருக்காக பராமரிக்கப்பட்ட ' வம்சத்தாரின் அட்டவணை ' புஸ்தகத்தை... அவர் ஒருவேளை குறிப்பிடுகிறார் போலும் (எசே. 13:9). மரித்துப் போனவர்களின் பெயர்கள் இந்தப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டன. அநேகம் பேர்கள் ஜீவ புஸ்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று நாம் வாஞ்சிக்கிறோம் (வெளி 3:5). மோசே வழிநடத்திச் சென்ற ஜனங்களின் பாவங்களை... , தேவனால...