சிசிடிவி!

30 September 2020 B.A. Manakala ராஜாவோ தேவனில் களிகூருவார். அவர்பேரில் சத்தியம் பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். சங். 63:11. ஒருமுறை , ஒரு உணவகத்திலே , ஓர் பெண்மணி உணவருந்திக் கொண்டிருந்தாள். சாப்பாட்டின் இடையே , அவளது உணவிலிருந்து உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை அவள் எடுத்தாள். கத்திக் கூச்சலிட்டு , சுற்றி இருந்த எல்லா வாடிக்கையாளர்களின் கவனத்தையும் அவள் ஈர்த்தாள். அந்த உணவக அதிகாரிகள் அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்டனர். பின்பதாக... , சிசிடிவி கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்த போது தான்... அவள் தானே அந்த கண்ணாடித் துண்டை உணவில் வைத்த குட்டு வெளிப்பட்டது! சத்தியத்திற்காக நிற்பதன் வாயிலாக , நாம் தேவனைத் துதிக்கிறோம். ஆனால் , பொய்யரோ மவுனமாக்கப்படுவர் (சங். 63:11). பெரும்பாலும்.. , பொய்யர்கள் செழிப்பது போலத் தோன்றலாம். ஆனால்.. , அவர்களால் நீண்ட தூரம் வரை செல்ல முடியாது. யூதேயா தேச ஆளுநரின் வழக்கப்படி , பிலாத்து.. , " நீங்கள் யார் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்... பரபாஸா... (மிகக் கொடிய சிறைக்கைத...