களைப்புற்று சோர்ந்து போனீர்களா?

B.A. Manakala நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன். என் தொண்டை வறண்டு போயிற்று. என் தேவனுக்கு நான் காத்திருக்கையால் , என் கண்கள் பூத்துப் போயிற்று. சங். 69:3. தானியேல் , தேவனிடம் ஜெபிப்பதில் சோர்ந்து போகவில்லை. காரியம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அவர் தினமும் மூன்று வேளையும் ஜெபித்துக் கொண்டிருந்தார்! அவருடைய வாழ்வில் வலி நிறைந்த தருணங்கள் அவருக்கு இருந்த போதிலும் , அவர் அதைச் செய்தார். எல்லாம் சுமூகமாக இருந்த போதும் கூட , அவர் ஜெபித்தார். நாம் சோர்வுற்று களைத்துப் போவது இயல்பானதே. சில சமயங்களில் , ' ஒரு குறிப்பிட்ட காரியமானது.... , ஒரு குறிப்பிட்ட விதத்தில்... , நாம் விரும்புகிற ஓர் குறிப்பிட்ட காலத்தில்... மாற வேண்டும் ' என்று நாம் தேவனிடம் ஜெபிக்கிறோம். ஜெபிப்பதில் சோர்ந்து போவதற்கு , நமக்கு இதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கக் கூடும். நாம் விரும்புகிற வண்ணமாகவே தேவன் நம் ஜெபங்களுக்கு பதில் அளிக்கலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். சில நேரம் , நம்முடைய ஜெபங்களுக்கு தேவனின் பதில் , நாம் எதிர்பார்க்கிற அதே விதத்தில் இல்லாதிருக்கலாம். நம்முடைய சந்தர்ப்பங்களுக்கு , ஒரு குறிப்பிட...