தேவன் நல்லவர்!

B.A. Manakala சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். சங். 73:1. என்னுடைய நண்பர்களுள் ஒருவன் என்னிடம் , " அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர்" என்று எங்கள் ஆசிரியர்களுள் ஒருவரைப் பற்றிக் கூறினான். ஆனால் , இன்னொரு நண்பனோ , அதே ஆசிரியரைப் பற்றி அதற்கு நேர்மாறாக , " அந்த ஆசிரியர் மிகவும் மோசமானவர்" என்று என்னிடம் கூறினான். ஒரே ஆசிரியரைப் பற்றின இந்த அறிக்கைகள் ஏன் மாறுபட்டு இருக்கின்றன என்பதை நாம் எல்லாருமே யூகிக்கக் கூடும். இங்கே ஆசாப் , ' தேவன் இஸ்ரவேலுக்கு நல்லவர் ' என்று கூறுகிறார் (சங். 73:1). ஆனால் , இந்த இஸ்ரவேல் ஜனங்கள் , அவர்கள் விரும்பாத கடினமான நேரங்களை பூமியில் எதிர்கொள்ள நேர்ந்த போது , எத்தனை முறை தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நம் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிறதாலோ , எல்லாவித ஆபத்துக்களுக்கும் நம்மை விலக்கிக் காக்கிறதாலோ , நமக்கு நூறு வயதாகிற வரை , நம்மை இந்த உலகில் உயிரோடு வைப்பதாலோ மாத்திரம் தேவன் நல்லவராக இராமல்... , உண்மையுள்ளவராகவும் , நாம் இப்பூவுலகில் எதை எதிர்கொள்ள நேர்ந்தா...