நீடிய வாழ்வு!

Tuesday, April 20, 2021 B.A. Manakala கர்த்தாவே , நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும் , என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். சங். 39:4. வேத வசனங்களில் வாக்குப் பண்ணப்பட்ட (உ.ம்.: எபே. 6:2) ' நீடித்த வாழ்நாள் ' என்பதும்கூட... மிகக் குறுகியதே! சங் 39:4ல் , தாவீதிடம் இருந்து வருகிற இந்த ஜெபத்திற்கு... , ஒருவேளை ' கொரோனா பெருந்தொற்று ' ஒரு பதிலாகக் கருதப்பட முடியுமா ? எல்லாம் இல்லாவிட்டாலும்... , உலகிலே மக்கள் செய்கிற பெரும்பாலான விஷயங்கள்... , இப்பூமியில் மாத்திரமே நன்மை பயப்பனவாக இருக்கும். நித்தியத்திலே அது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாமல் போகலாம். பூமியிலே , நம்முடைய வாழ்க்கையின் தற்காலிகத்தன்மையைப் பற்றி... 4-6 வசனங்களில் , தாவீது தொடர்ந்து பேசுகிறார். ஆனால்... ஏன் ? ஒருவேளை... , 7ம் வசனம் அதற்கான பதிலாக இருக்கலாம். பூமியிலுள்ள தற்காலிகமான விஷயங்களின் மீது நம்பிக்கையை வைப்பதே நம்முடைய மனப்பான்மையாக உள்ளது. ஆனால்... , நித்தியத்தை முன்னோக்கில் வைத்திருக்கும் ஒருவருக்கு.. , அவருடைய நம்பிக்கை , தேவனில் மட்டுமே இருக்க வேண்டும். ...