Posts

Showing posts from October, 2020

இருதயத்தில் பாவம்

Image
B.A. Manakala என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் , ஆண்டவர் எனக்குச் செவிகொடார். சங். 66:18. மேற்காணும் படத்தில் உள்ளது ' துரியன் பழம் ' ஆகும். இது வெளியில் இருந்து பார்ப்பதற்குக் கூர்மையாய் , அருவருக்கத்தக்க தோற்றத்தோடு இருக்கிறது. ஆனால்... உள்ளிருக்கும் பழம்... , அழகாகவும் , ருசியாகவும் இருக்கும். பார்க்க அழகாக இல்லாவிட்டாலும் , மக்கள் இதை வாங்குவதற்குக் காரணம் , உள்ளே இது ருசியாக இருப்பதால் தான். நாம் ஜனங்களைப் பார்க்கையில் , வெளியே என்ன இருக்கிறதோ , அதை மட்டுமே நாம் பார்க்கக் கூடும். ஒருவேளை , அது உண்மை நிலையாய் இல்லாதிருக்கலாம்.  சிலர் , வெளியே நன்றாகத் தோற்றமளிப்பர். சிலரோ... வெளியே பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாய் இல்லாதிருக்கலாம். மற்ற ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் என்ன இருக்கிறது... என்பதைப்  படித்தறியக் கூடிய பகுத்தறிதல்.... நம்மில் எல்லாருக்கும் இருப்பதில்லை. முரண்பட்ட விஷயம் என்னவென்றால் , சில சமயம்... , நம்முடைய சொந்த இதயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை நமக்கு நாமே பார்க்க முடியாது என்பது தான். அதனால் தான்... தாவீது ஒரு முறை , " உமக்கு வேதனை உண்டாக்க...

ஜெபத்தில் துதி

Image
B.A. Manakala அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன். என் நாவினால் அவர் புகழப்பட்டார். சங். 66:17. சமீபத்தில்.... எங்கள் குடும்பத்தில் , நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து , மற்ற ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று தீர்மானித்தோம். இது எங்களுடைய குடும்பத்திலே , பலம் மிக்க ஓர் பந்தத்தை உருவாக்கியது. பெரும்பாலும்.... நாம் மற்றவர்களிடம் உள்ள நல்லதை விட... , குறையைக் கண்டுபிடிக்கிறதிலே , கைதேர்ந்தவர்கள். ஏதோ ஒரு வகையிலே... இந்த மனப்பான்மை , நமக்கு தேவனோடு உள்ள உறவிலேயும் பிரதிபலிக்கிறது. பொதுவாக , நாம் தேவனை , வெறும்.... கொடுப்பவராகவே நினைக்கிறோம். குறைந்தபட்சம்... , நாம் ஜெபிக்கிற வேளைகளிலாவது , நாம் அவரைத் துதிக்கிறதை , அவர் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். சங்கீதக்காரர் , ஜெபத்திலே , துதியையும் சேர்த்துக் கொள்கிறார் (சங். 66:17). துதிப்பதற்கு , தேவன் மிகவும் தகுதியானவர் (சங். 145:1). சாத்தியமான வேளைகளில் எல்லாம்.... , நாம் தேவனையும் , மற்றவர்களையும் , புகழக் கற்றுக்கொள்வது நல்லது. நாம் தகுதியானவர்களாய் இருக்கையில் , பிறர் நம்மைப் புகழ்ந்து பேசாவிட்டாலும் ...

பிறரிடம் சொல்லுங்கள்

Image
B.A. Manakala தேவனுக்குப் பயந்தவர்களே , நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள் ; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங். 66:16. நான் உரையாடுகிற போதெல்லாம் , என் கவனத்தை தேவன் பக்கமாய்த் திருப்புகிற ஒருவரை நான் அறிவேன். அதனால் அவரோடு சம்பாஷிப்பதை நான் விரும்புகிறேன். பிறரோடு பேசாமலும் , இருதயத்தில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளாமலும் , மனிதர்களாகிய நம்மால் வாழ முடியாது. ஆதியில் இருந்தே அவ்விதமாகத் தான் தேவன் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால்.... , நாம் எதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமான ஒரு கேள்வி ஆகும். நாம் பிறரிடம் வார்த்தைகளால் மட்டுமே பேசுகிறோம் என்று நினைக்காதீர்கள். நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம்... நம் வாழ்க்கையின் மூலம் , நாம் எப்போதுமே பேசிக் கொண்டே இருக்கிறோம்! இங்கே சங்கீதக்காரர் , ' தேவன் எனக்கு என்ன செய்தார் என்பதை உங்களுக்குச்  சொல்லுவேன் ' என்று கூறுகிறார் (சங். 66:16). பிறரிடம் தேவனைப் பற்றிக் கூறுவது நம்முடைய வாழ்நாள் பணி ஆகும். உங்களுடைய பேச்சிலே.... கிருபை பொருந்தினவர்களாயும் , வசீகரிக்கிறவர்களாயும் இருங்கள் (கொலோ. 4:6). உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக...

மிகச் சிறந்ததைக் கொடுங்கள்

Image
B.A. Manakala ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே , கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன். காளைகளையும் , செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். சங். 66:15. ஒருமுறை , ஒரு மனிதர் ஜெபக்கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார். காணிக்கை சேகரிக்கும் நேரம் வந்தபோது , கொடுப்பதற்கு அவரிடம் பணம் இல்லாததால் , அவர் மிகவும் வருந்தினார். கடைசியில் அவர் , தன் கையில் கட்டி இருந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி , காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டார். எதையுமே கொடுக்கும்படிச் சொல்லி , தேவன் ஒருபோதும் நம்மைக் கட்டாயப்படுத்தவே மாட்டார்.... சிறந்த காணிக்கையைப் பற்றி மறந்து விடுங்கள். யாருமே ,  எதையும்... தேவனுக்கு நேரடியாக வழங்க முடியாது.... என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும்... , அவை மக்கள் வழியாகவே அனுப்பப்படுகிறது. அதனால்.... ,  சரியான மனப்பான்மையுடன் காணிக்கைகளைக் கொடுக்கவும் , பெறவும் மனமுவந்தவர்களாய் இருங்கள். உங்களுக்கு அளிக்கப்படுகிற அனைத்தையுமே வாங்கிக் கொள்ளாதீர்கள் ; உங்களுக்கு ' இனிமேல் தேவையில்லை ' என்கிற பொருட்களை மட்டுமே கொடுக்காதீர்கள். தேவனுக்கோ அல்லது  மற்றவர்களுக்கோ.......

பிரச்சனையில் பொருத்தனைகள்

Image
B.A. Manakala என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து , என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். சங். 66:14. "பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே.... , என் மகன் மிகக் கடுமையான நோய்வாய்ப்பட்டான். தேவன் அவனை குணமாக்குவாரானால்.... , அவன் கர்த்தருடைய ஊழியத்திற்காய் பிரித்தெடுக்கப்பட்டவனாய் இருப்பான்... என நான் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை பண்ணினேன்." என்று ஒரு தாயார் கூறினார்கள். இந்த சங்கீதத்தில் (66:14) நாம் காண்பது போலவே , நாமும்... , பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கையில் , பொருத்தனைகளைச் செய்ய முயல்கிறோம். பிரச்சனைகளில் இருந்து வெளிவர... , அநேகமாய் , இது ஒரு நல்ல வழி தான். ஒருவேளை..... , தேவனும் , யாரையாகிலும் ஒரு பொருத்தனை செய்ய வைக்கவோ , அவருக்குக் கீழ்ப்படிய வைக்கவோ , அல்லது அவருடைய திட்டத்தை நிறைவேற்றவோ... , உதவும் ஓர் ஏதுவாகப் பிரச்சனைகளைப் பயன்படுத்தக் கூடும். பிரச்சனைக்காகக் காத்திராமல் , கர்த்தர் விரும்புகிற போதும் , விரும்புகிற படியும் , அவருக்குப் பொருத்தனைகளை ஏறெடுப்பதுவே , நமக்குச் சாலச் சிறந்ததாய் இருக்கும். மேலும்.... , பொருத்தனைகளை நிறைவேற்ற முடியாமல...

நமது காணிக்கை

Image
B.A. Manakala சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்.... என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். சங். 66:13 , 14. என்னுடைய ஒரு பிறந்தநாளின் போது , என் சிறு மகன் என்னிடத்தில் வந்து , " அப்பா , நான் உங்களுக்கு சிறப்பான ஒரு அன்பளிப்பு வைத்திருக்கிறேன்" என்று கூறியபடி , கிழித்து... , மடிக்கப்பட்டிருந்த... ஓர் காகிதத் துண்டை என்னிடம் அளித்தான். இன்று ,  அவனுடைய அன்பளிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ,  அதில் அவன் எழுதியிருந்த... "அப்பா , நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" ... என்ற செய்தியை என்னால் மறக்க முடியாது. ஒரு வேளை , நம்மில் சிலர் தேவனுக்கு... பல பொருள்களைக் கொடுத்திருக்கலாம். தேவனுக்குப் பண்ணின பொருத்தனைகளை நிறைவேற்ற வேண்டியது முக்கியம் (சங் 66:14). ஆயினும் , அது அன்போடு செய்யப்பட வேண்டியது அதை விட முக்கியம். காணிக்கையின் தரத்தையும் , தரும் அளவையும் விட தருபவரின் மனப்பான்மை மிகவும் முக்கியம். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் மட்டுமே தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரி. 9:7). தேவனுக்கு நாம் அளிக்கிற காணிக்கையைப் பற்றி சிந்தித்து , ந...

நெருப்பு மற்றும் வெள்ளத்தின் மூலம் செழிப்பு

Image
B.A. Manakala மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப் போகப் பண்ணினீர். தீயையும் , தண்ணீரையும் கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டு வந்து விட்டீர். சங். 66:12. ஒரு முறை , நாங்கள் , ' அமைதிப் பள்ளத்தாக்கு ' என்று அழைக்கப்படும் சுற்றுலா தலத்தைப் பார்வையிடச் சென்றோம். காட்டிலே..... சேறும் பாறைகளும் நிறைந்த சாலையின் வழியாகச் சென்ற... இரண்டு மணி நேர ஜீப் சவாரி.... எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மலை உச்சியில் இருந்து பார்த்த இயற்கைக்காட்சி மிகவும் அற்புதமாக இருந்ததால் , நாங்கள் அந்தக் கடினமான பயணத்தைப் பற்றி மறந்து போனோம். நாம் இந்த பூமியிலே.... அக்கினி மற்றும் வெள்ளத்தினூடே செல்கிறோம். ஆனால் சென்று சேரப்போகும் இடத்தில்... ஏராளம் செழிப்பு இருக்கிறது (சங். 66:12). தளர்வின்றி , தொடர்ந்து முன்னேறிச் செல்ல , இந்த மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்...: 1) உங்களோடே கூட பயணம் செய்து கொண்டிருக்கிற மற்றவர்களும் இருக்கிறார்கள். 2) செல்லுகிற பாதையை விட... , சேருகிற இடத்தின் மீது கவனத்தை செலுத்துங்கள். 3) சேர வேண்டிய இலக்கிற்கு , உங்களைக் கூட்டிச் செல்ல.... நிச்சயமாகவே தேவ...

சோதிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படல்

Image
B.A. Manakala தேவனே , எங்களைச் சோதித்தீர் ; வெள்ளியைப் புடமிடுகிறது போல எங்களைப் புடமிட்டீர். சங். 66:10. இப்போது , கோவிட்-19 க்கான தடுப்பூசி , பல நாடுகளாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்... , அவை எதுவுமே , போதுமான அளவு சோதனை செய்யப்பட்டு , இன்னும் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை! நீங்கள் சுத்திகரிக்கப்பட்டவர்கள் என்று நிரூபிக்கப்படத் தக்கதாக , அடிமைத்தனம் , நெருப்பு , மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் சோதிக்கப்பட்டு , புடமிடப்படுகிறீர்கள் (சங். 66:10-12). ஆயினும் , நினைவில் கொள்ளுங்கள்.... கடைசியாக , மிகு‌ந்த செழிப்பு இருக்கிறது (வச. 12). நாம் அனைவருமே... இறுதி தயாரிப்பை விரும்புகிறோம். ஆனால்... , இடையே உள்ள செயல்முறையை அவ்வளவாக விரும்புவதில்லை. "இக்காலத்துப் பாடுகள் , இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" என்று ரோமர் 8:18  கூறுகிறது. உங்களைப் பாடுகளிலிருந்து விலக்கிக் காக்கும்படி தேவனிடம் கேட்க விரும்புகிறீர்களா அல்லது பாடுகளின் வழியாகக் கடந்து செல்வதற்கு , அவருடைய கிருபையைக் கேட்க விரும்புகிறீர்களா ? சோதனை எந்த அளவுக்கு மிகக் கடினமாக இருக...

வாழ்க்கை அவர் கரத்தில்

Image
B.A. Manakala அவர் நம்முடைய கால்களைத் தள்ளாட வொட்டாமல் , நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். சங். 66:9. நான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது , சில வேளைகளில்...  என்னுடைய சிறு குழந்தைகள் ,  ஓட்டுநர் இருக்கைக்கு வர விரும்புகிறார்கள். வண்டி ஓடிக் கொண்டிருக்கையில் , ' திசை மாற்றும் சக்கரத்தை ' அவர்களிடம் கொடுக்க வேண்டுமெனில்.... நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் ,  வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போதே... அவர்கள் பெரும்பாலும் தங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். நாம் தவறாகக் கையாள்வதாலோ.... அல்லது , ' எப்படிக் கையாள வேண்டும் ' என்றே தெரியாத நம் நண்பர்கள் மற்றும் அடுத்தவர்களின் கைகளில் நாம் கொடுப்பதாலோ.... நம் வாழ்க்கை , பெரும்பாலும்.... அபாய கட்டத்தில் இருக்கிறது. நினைவிருக்கட்டும்...... உங்கள் குழந்தைகள் , பெற்றோர் , நண்பர்கள் , உறவினர்கள் இன்னும் இது போன்ற பலருடைய வாழ்க்கை.... உங்கள் கைகளிலும் கூட இருக்கலாம். இறுதியில்... அவர்களும் தங்களுடைய வாழ்க்கையை சர்வ வல்லவருடைய கரங்களில் ஒப்புவிக்கத்தக்கதாக.... , அவர்களுடைய வாழ...

ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்

Image
B.A. Manakala அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்.  அவருடைய கண்கள் ஜாதிகள் மேல் நோக்கமாயிருக்கிறது. துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. சங். 66:7. பெற்றோராக  நாங்கள் ,  எங்கள் குட்டி மகளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பதாக  நினைக்கிறோம். ஆனால் அவளோ....  அலமாரிக்குள்ளே உட்கார்ந்து கொள்வது , கோப்பைகளை உடைப்பது , சுவற்றில் வரைவது  போன்று... அவள் செய்கிற சில காரியங்களால் , எங்களைத் திகைக்க வைக்கிறாள். ஜாதிகளின் ஒவ்வொரு அசைவையும் தேவன் உன்னிப்பாய் கவனிக்கிறார் (சங். 66:7). சபை , குடும்பம் , தனி நபர்கள் , உயிரினங்கள் , கிரகங்கள் , ... இன்னும் மீதமுள்ளவை... அனைத்தின் ஒவ்வொரு நகர்வையும் , தேவன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். முழு சிருஷ்டிப்பின் ஒவ்வொரு அசைவையும் அவர் கண்காணிக்கிறார்.  நாடுகள் வெவ்வேறு திட்டங்களை வகுக்கின்றன..... சில சமயம் கட்டுவதற்கு... ; பல சமயங்கள் அழிப்பதற்கு.... ; சில வேளைகளில்.. , தேவன் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வே கூட இல்லாமல்! உங்கள் வாழ்வின் எந்த சந்தர்ப்பங்களில் , ' தேவன் கவனிக்கிறார் ' என்பதை நீங்கள் மறந்த...

தேவனின் அற்புதங்கள்

Image
B.A. Manakala கடலை உலர்ந்த தரையாக மாற்றினார். ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள். அங்கே அவரில் களிகூர்ந்தோம். சங். 66:6. நான் ஒரு சுத்தியலை எடுத்து , தரையிலே மெதுவாக அடிக்கத் தொடங்கினேன். பின்னர் , அவ்வாறு தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் போதே... , என் இடது கையை அதற்குக் கீழே... முன்னும் பின்னுமாக ஆட்டினேன். அப்படியே...நான் வேகத்தை நொடிக்கு மூன்று முறை... என்கிற அளவுக்கு அதிகரித்தேன். என் குழந்தைகள் வாயடைத்துப் போயினர்! நாம் தேவனுடைய அற்புதங்களைக் குறித்து , ஆச்சரியப்பட்டுப் போகிறோம். ஆனாலும் , அப்படிப்பட்ட அற்புதங்கள் வாயிலாக , தேவனுடைய வல்லமை முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? இயேசுவும் , பேதுருவும் தண்ணீர் மேல் நடந்தது போலவே , தேவன் , இஸ்ரவேலரையும் கடலின் மேல் நடக்கப் பண்ணியிருக்கலாம். பிலிப்புவுக்குச் செய்தது போலவே , இவர்களையும் அக்கரைக்குப் பறந்து போகச் செய்திருக்கலாம். கோராகுக்கும் அவன் கூட்டத்தாருக்கும் செய்ததைப் போலவே , அக்கினியாலோ.. , அல்லது பூமியைப் பிளக்கப் பண்ணியோ , எகிப்தியரை அவர் கொன்றிருக்கலாம். அற்புதங்கள் தேவனுடைய வல்லமையைப் பற்றின கணநேரக...

பூமியிலுள்ளவை யாவும்

Image
B.A. Manakala பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு , உம்மைத் துதித்துப் பாடுவார்கள். அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். சங். 66:4. "என்னைத் திருப்பிக் கடிக்காத எல்லாவற்றையும் நான் சாப்பிடுகிறேன்" என்று யாரோ ஒருவர் கூற , நான் கேட்டிருக்கிறேன். இதன் மூலம் அவர் , ' தனக்கு சாப்பிடுகிறதில் எந்த விருப்பத்தேர்வுகளும் இல்லை ' என்று கூற முயல்கிறார். ஆனாலும்.... , சாப்பாட்டு மேஜை மீது வைக்கப்படுகிறவற்றில் சில முன்னுரிமைகளை அவர் வைத்திருக்கிறதை நான் கவனித்தேன். தேவனை தொழுதுகொள்ளுவதில் இருந்து எதற்குமே விலக்கு அளிக்கப்பட முடியாது. "யாவும்" என்பது.... தேவனின் படைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியது.... , உயிரற்றவையும் கூட தான். அவை யாவும்.. , அவருக்கும் , அவருடைய கட்டளைகளுக்கும் , அடங்கி இருக்கிறது. வேதத்திலே , இதற்கு உதாரணங்களாக... கடல் , நிலம் , தாவரங்கள் , புழுக்கள் , மீன் , காற்று.... இவை போன்றவை , தேவனுக்குக் கீழ்ப்படிகிறதை நாம் காண்கிறோம்! மனிதனுக்கு , தன் சுய விருப்பத்தின் படி தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பதால் , அவன் ம...

எவ்வளவு மகிமை!

Image
B.A. Manakala அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி , அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். சங். 66:2. மிதக்கும் பனிப்பாறை என்பது , மாலுமிகள் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு விஷயம். ஏனென்றால்... , பொதுவாகவே , அப்பாறையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே தெரியும். வேறு விதமாகக் கூறின் , மிதக்கும் ஒரு பனிப்பாறையின் உண்மையான அளவைக் குறித்ததான அவர்கள் கணிப்பு மிகவும் தவறாக இருக்கலாம். ' தேவன் எவ்வளவு மகத்துவமானவர் ' என்பதை ஒருபோதும் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.... என்பதை , சிருஷ்டிக்கப்பட்ட படைப்புகளாக.. , நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ' தேவன் யார் என்பது எனக்குத் தெரியும் ' என்று சிந்திப்பதன் மூலம் , நாம் தேவனை வரம்புக்குட்படுத்துகிறோம். தேவனின் எல்லைகளை மனித பாஷையாலும் , மூளையாலும் விவரிக்க முடியாது. ' தேவன் யார் ' என்பது பற்றி உங்களுக்கு சின்னஞ்சிறியதோர் கண்ணோட்டம் இருக்குமேயானால்.... , பிறருக்கு அதைப் பற்றிக் கூறுவதை உங்களால் நிறுத்த முடியாது. தேவன் எவ்வளவு மகிமையானவர் என்பதை அறிந்து கொள்ள , நீங்கள் எந்த அளவுக்கு ஆர்வமாய...

ஆரவாரத்தோடு துதியுங்கள்!

Image
B.A. Manakala பூமியின் குடிகளே , நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சங். 66:1. எங்களுடைய ஒரு வயது மகள் இன்னும் பேசவில்லை. ஆயினும் , அவள் பசியாகவோ , தூக்கக் கலக்கத்தோடோ , கோபமாகவோ , மகிழ்ச்சியாகவோ... இருக்கும் போது , அந்த உணர்ச்சிகளை எப்படியாவது அவள் வெளிப்படுத்தி விடுகிறாள். சில சமயங்களில் , இரவில் மிகு‌ந்த சத்தமாக அவள் அழுவதால் , மறுநாள் காலையில் அயலகத்தார் அது பற்றி எங்களிடம் விசாரிப்பதுண்டு. துதிக்கும் போது நம்முடைய குரலை உயர்த்த வேண்டும் என்று மெய்யாகவே தேவன் விரும்புகிறாரா ? எந்தெந்த வழியெல்லாம் சாத்தியமோ , அப்படியெல்லாம் நம் துதியை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அது சத்தமாகவோ , மௌனமாகவோ , அழுதோ , நகைத்தோ , பாடியோ , வார்த்தைகளாலோ - இது போன்ற வேறெந்த  விதங்களிலோ இருக்கலாம். நம்முடைய வாழ்க்கை முழுமையும்... சொல்லாலும் , செயலாலும்... அவரையும் அவர் புகழையும் பறைசாற்ற வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். தனி நபர்களாய் , குடும்பங்களாய் , சபைகளாய்.... நம்மை உண்மையான இறை வழிபாட்டாளர்களாக.... , நம் அயலகத்தாரும் , சுற்றியுள்ள பிற ஜனங...