கூர்மையான கத்தியா?

Monday, July 05, 2021 B.A. Manakala நீ கேடுகளை செய்ய எத்தனம் பண்ணுகிறாய். கபடு செய்யும் உன் நாவு , தீட்டப்பட்ட சவரகன் கத்தி போல் இருக்கிறது. சங். 52:2. சமீபத்தில்... , நாங்கள் எங்களுடைய சமையலறையின் பயன்பாட்டிற்காக , ஒரு கத்தியை வாங்கினோம். நாங்கள் இதுவரை பயன்படுத்திய மற்ற எல்லா கத்திகளையும் விட... , இது மிகவும் கூர்மையாக இருக்கிறது! எங்கள் விரல்களையும் கூட அடிக்கடி வெட்டி விடுகிறது. நம்முடைய நாவும் கூட , கூர்மையான கத்தி போன்று இருக்க முடியும் (52:2). சமையலறை கத்தி ஏற்படுத்தும் காயங்கள்... , பெரும்பாலும் பாதிப்பற்றவை. ஆனால்... நாவினால் ஏற்படக்கூடிய காயங்கள்... , கையாளக் கடினமானவை. வேதத்தில் , நாவைக் குறித்து பல குறிப்புகள் உள்ளன...: அதிகப் பேச்சு (நீதி. 10:19) , மாறுபாடுள்ள நாவு (15:4ஆ) , கோள் சொல்லும் நாவு (26:20) , நெருப்பு (யாக் 3:6). கெட்ட வார்த்தைகள் பேசுதல் (எபே. 4:29)... இப்படி இன்னும் பல! மிக முக்கியமாக... , நாவானது , ஆரோக்கியத்தையும் கொண்டுவர முடியும் (நீதி. 15:4அ). உங்கள் நாவை... , குத்துவதற்கா.. , குணமாக்குவதற்கா... , எவ்வாறு பயன்படுத்துவது என்பதை... , நீங்கள் தீர்மானிக்க முட...