உபத்திரவங்களில் மட்டுமா?

Thursday, May 27, 2021 B.A. Manakala தேவன் நமக்கு அடைக்கலமும் , பெலனும் , ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங். 46:1. சில வேளைகளில்... , எங்களுடைய பிஞ்சுக் குழந்தையை , அவளுடைய உடன்பிறப்புகளில் ஒருவருடன் சேர்த்து படுக்கையறையில் விட்டுவிட்டு , நாங்கள் கதவைப் பூட்டி விடுவோம். ஆயினும்... , எங்களுடைய கவனமெல்லாம் அங்கே தான் இருக்கும். அவள் அழுதால்... , உடனே நாங்கள் ஓடிச் சென்று , என்ன விஷயம் என்று பார்ப்போம். மேற்காணும் வசனத்தில்... , " தேவன் ஆபத்துக் காலத்தில் மாத்திரமே உதவி செய்ய தயாராக இருக்கிறார்" என்று சொல்வது போலத் தெரிகிறது! ஆனால்... , உண்மை என்னவென்றால்.. , நாம் ஜெபிக்கும் போது மட்டுமே தேவனை நோக்கிப் பார்க்கிறோம். நமக்கு ஆபத்து நேரிடுகையில் மட்டுமே , அவரை நோக்கிக் கதறிக் கூப்பிட முனைகிறோம். எங்கள் குழந்தை அழுகையில்... , அவளுக்கு சிறப்பான பராமரிப்பு கிடைக்கிறது. என்றாலும்... , பெற்றோராக நாங்கள் எப்போதும் அவள் மீதே கவனமாய் இருக்கிறோம். நாம் போகும் இடமெல்லாம் , தேவன் நம்மோடே கூட இருக்கிறார் (யோசு. 1:9). நாம் முழங்காலில் நிற்கையில்.. , தேவனை இன்னும் நன்றாகக் காண்கிறோம்...